Wednesday, December 5, 2012

மொழி ஆராய்ச்சி - 1


இந்திய எழுத்து மற்றும் குறியீடுகளின் வாயிலாக...


இந்தியாவின் பழங்கால எழுத்து முறை என்று பார்க்கின்ற பொழுது முதலில் வருவது பிராமி எழுத்து முறை. அசோகரின் கி.மு 3ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும், தமிழ்னாடு மற்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் பிராமி எழுத்து முறை பயன்படுத்தி இருப்பதை வைத்து அதன் பழமையை நாம் யூகிக்க முடியும்.தெற்காசியா முழுவதிலும் பிராமி எழுத்து முறை பரவி இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அசோகர் கால பிராமி கல்வெட்டுகள்

பிராமி எழுத்து முறையின் மூலம் பற்றி 3 தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

1.செமிட்டிக் எழுத்து முறையை கொண்ட ஆதிகால எழுத்து முறையான அரமேயத்திலிருந்து பிராமி எழுத்து முறை உருவாகியிருக்கலாம்.

2.ரைஸ் டேவிட் என்கின்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்து முறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்.

3.ஹேண்டர் மற்றும் ரேண்டர் என்கின்ற ஆங்கில மொழி அறிஞர்கள் இந்த எழுத்து முறை இந்தியாவிலிருந்து முக்கியமாக சிந்து சமவெளி குறீயிடுகளிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர்.


மேலும் சிலரோ அசோகரே இந்த எழுத்து முறையை கல்வெட்டுகளில் பொறிப்பதற்காக கண்டுபிடித்திருக்கக் கூடும் எனவும், மேலும் சில தமிழ் அறியர்களோ பிராமி என்பது தமிழ் எழுத்து முறையே என்றும் அசோகர் அதை பிராகிருதம்(வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகள் மற்றும் அதன் வழக்குகள்) எழுதக்கூடிய எழுத்து முறையாக உருவாக்கினார் என்றும் கூறுகின்றனர்.

சோழர் கால வட்டெழுத்து


கிரந்த எழுத்து முறை
 இந்த பிராமி எழுத்து முறையிலுருந்தே வட்டெழுத்து முறையும், கிரந்த எழுத்து முறையும் தோன்றியதாக கருதுகின்றனர். கிரந்த எழுத்து முறை என்பது தென்னிந்தியாவில் வடமொழியினை எழுத பயன்படுத்தப்பட்ட் ஒரு எழுத்து முறை. வட்டெழுத்து என்பது தமிழ் பிராமிக்கு மூலம். வட்டெழுத்து வழியாக வந்த தமிழ் பிராமியே தற்கால தமிழ் எழுத்துக்களுக்கு மூலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



இதனடிப்படையில் நமக்கு முன் தோன்றும் கேள்விகள்...

பிராமி எழுத்து முறை தென்னிந்தியாவிற்கு அறிமுகம் ஆகும் பொழுது இங்கிருந்த எழுத்துக்களுக்கு அல்லது குறியீடுகளுக்கு மூலம் என்ன?

தமிழிற்கு பிராமி எழுத்து முறையே மூலம் என்றால் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள்/குறியீடுகளுக்கும் தமிழிற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

பிராமியின் கால கட்டம் சிந்து சமவெளி காலத்திற்கு முந்தைய காலகட்டமா இல்லை பிந்தைய கால கட்டமா?


தொடரும்...

Tuesday, December 4, 2012

குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் மோடி மந்திரமா!?

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாக இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999இல்தான் அவர் முதல்வரானார்.



1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங...்களில் ஒன்றாகஇருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோதுஎட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.


மின்உற்பத்திக்குத்தேவையான கட்டுமானங்களில் 35விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில்உருவாக்கப்பட்டது.


நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின்மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப்பெரிய ரிலையன்ஸ்எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின் சோடாஉப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான்உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராகநரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.


குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக்கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

http://articles.timesofindia.indiatimes.com/2009-01-31/edit-page/28016891_1_vibrant-gujarat-gujarat-today-narendra-modi


Tuesday, October 30, 2012

இன்றைய அனுபவம் (29.10.2012) - சாதித்திமிரின் மிச்சங்களின் எச்சங்கள்


சாதி - படிப்பறிவும், பகுத்து அறியும் அறிவும் கிடைக்கப்பெறாத மக்களின் கோபக் கனலாக அவர்களின் அரிவாளில் மட்டுமே தெறிக்கும் என்பதில்லை, நன்கு படித்து, பகுத்து அறியும் அறிவு பெற்ற மக்களின் நயவஞ்சகத்தனமான சிரிப்பாக அவர்களின் நாக்கிலிருந்து கூட வெளிப்படலாம்.

முதலாமாவதை கூட நாம் சகித்துக்கொள்ள முடியும், மாற்றிவிட முடியும். இரண்டாமாவதை பொறுத்துக்கொள்வதே கடினம்.

நேற்று மதிய உணவு வேளையில் அலுவலகத்தில் நான் சந்தித்த ஒரு நபரே என்னுடைய மேற்குறிப்பிட்ட சிந்தனைக்கு காரணமாக அமைந்தவர், அவரது பெயர் ஸ்ரீனாத் சக்கரவர்த்தி, வயது 40 இருக்கலாம். அமெரிக்காவிலேயே படித்து இங்கேயே வேலை பார்ப்பவர். எங்களைப் பற்றின தகவல்களை பரிமாறிக்கொண்ட பிறகு பின்வருமாறு அவர் ஆரம்பித்தார்.

"நீங்கள் கத்தோலிக்கரா இல்லை வேறு பிரிவா..."

என் மூதாதையர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறிவிட்டு கிறித்துவத்தின் வேறு பிரிவுகள் பற்றியும் விவாதித்தோம். பொதுவாக என்னை கிறித்துவன் என்று குறிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன் ஆதலால் அவரிடம் பின்வருமாறு கூறினேன்.

"நான் கடவுள் மறுப்பாளன்,பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன்" என்று சொல்லிவிட்டு பெரியாரை தெரியுமா என்று கேட்டேன்.

தெரியும்,தி.க வரலாற்றையும் படித்திருக்கிறேன் என்றார். யாரும் பெரியாரை பின்பற்றுபவர் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் என்றார்.

அவ்விதம் மறைக்கும் அளவிற்கு அவர் தவறு எதுவும்,செய்யக்கூடாத எதையும் செய்யவில்லையே என்றேன்.

அவருடைய குற்றச்சாட்டு.. He is aggressive என்பது.

அந்த காலத்தில் அப்படிப்பட்ட aggressiveness தேவைப்பட்டது, இப்பொழுது அந்த அளவிற்கு அதற்கு தேவை இல்லாமல் இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினேன்.

பிறகு எங்களின் பேச்சு எப்படியோ சாதியின் பக்கம் சென்றது. கிறித்துவத்தில் கூட சாதி இருக்கிறது என்றும், மதம் மாறியவர்கள் சாதியையும் பிடித்துக் கொண்டு வந்தால் எதற்கு மதம் மாற வேண்டும் என்பதாக விவாதம் சென்றது.

பிறகு அவர் கேட்ட ஒரு கேள்வி அவரின் உண்மை முகத்தை கொஞ்சம் வெளிப்படுத்தியது.

எதற்காக சாதி இருக்கக் கூடாது என்கிறீர்கள் என்றார்.

எதற்காக இருக்க வேண்டும் என்கிறீர் என்று கேட்டுவிட்டு சமூக ஏற்றத்தாழ்வை நீக்க மனிதனுக்குள்ள பேதத்தை போக்க சாதி களையப்பட வேண்டும் என்றேன் அதன் வேர் மனுவிலிருந்து வந்தது என்றும் கூறினேன்.

வேறுபாடு இல்லாத இடமில்லை என்று நியாயப்படுத்த முயன்றார், மேலும் அதற்கு உதாரண்மாக நானும் என் மனைவியும் கூட வேறுபடுவதாகவும் ஒரு அறிவுப்பூர்வ உதாரணத்தை அளித்தார்!

நேர்க்கோட்டு பிரிவிற்கும் (வழிபாடு அடிப்படையில் அல்லது இனத்தின் அடிப்படையில்), செங்குத்து அடிப்படையிலான பேதத்திற்கு வேறுபாடு உள்ளது என்று கூறினேன். நீங்கள் உங்கள் மனைவியை விட உயர்ந்தவர் என்று நினைத்தாலும் பிரச்சினை ஆரம்பிக்குமே என்றேன்.

மனுவில் குறிப்பாக எந்த இடத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று இருக்கிறது என்று கேட்டார்.

நிச்சயமாக இருக்கிறது என்றேன். நேரடையாகவும் சரி, குற்றங்களுக்கான தண்டனைகளின் வேறுபாடு என்கின்ற அடிப்படையில் மறைமுகமாகவும் இருக்கிறது என்றேன். குறிப்பாக எங்கே இருக்கிறது(சட்ட எண்)என்று மின்னஞ்சல் அனுப்புவதாகவும் கூறினேன்.

அவரிடம் உங்களிடம் ஒரு நேரடி கேள்வியை கேட்க வேண்டுமென்று கூறி பின்வருமாறு கேட்டேன்.

"இது பேதமல்ல வெறும் சமூகப்பிரிவு தானென்றால் கோயில் கர்ப்பக்கிரகத்தில் அனைவரையும் உள்ளே விட உங்களுக்கு சம்மதமா..."

அவர் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை...அடுத்த அறிவுப்பூர்வ உதாரணக் கேள்வியை கேட்டார். அந்த கேள்வி அவரின் உண்மை முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியது மேலும் இவர் இங்கு படித்தவர் தானா என்கின்ற சந்தேகத்தையும் எழுப்பியது!?

அவரின் கேள்வி...உங்களின் source code- இல் கை வைக்க உங்கள் மகனை அனுமதிப்பீர்களா என்று...

கண்டிப்பாக அவன் கை வைத்து கற்றுக்கொள்ள எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றேன், நீங்கள் அனுமதிப்பீர்களா என்று மறுபடியும் கேட்டேன்.

அதற்கு கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டுமென்று கூறி நழுவ முயன்றார். அந்த நிர்வாகம் முடிவெடுத்தாலும் சிலர் சம்மதிக்க மாட்டார்களே என்றேன்.

இதற்கு பதில் இருக்கிறது, முதலில் மனுவில் இருக்கும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்ற வரிகளை பற்றி விவாதிக்கலாம் இதை பிறகு பார்க்க்கலாம் என்றார்.

நானும் சரி என்று விடைபெற்றேன்.

அவரிடமிருந்து எழுந்து வரும்பொழுது இந்த கட்டுரையின் முதலில் நான் எழுதிய கருத்துகள் தான் என் மனத்தில் ஓடியது. மேலும் பெரியார் அப்படி என்ன செய்து கிழித்தார் என்று பலன் அனுபவித்த சில தமிழர்களே கேட்கிறார்களே அதற்கான ஒரு சிறு பதிலும் கிடைத்தது.



அவருக்கு எதிரில் அமர்ந்து தைரியமாக பேசும் துணிச்சலையும், பகுத்து அறிந்து விவாதிக்கும் ஆற்றலையும் கொடுத்ததே அந்தப் பெரியார் தானே...அவரும் அம்பேத்காரும் இல்லை என்றால் நாமும் இல்லை நாம் தின்னும் சோறும் இல்லை.....அவர்கள் எதிர்த்த சாதித்திமிரின் மிச்சங்கள் இன்றும் எச்சங்களை உமிழ்ந்து கொண்டு நம்மிடையே உலாவிக்கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரிய விடயமே...



Wednesday, October 24, 2012

இந்தியப் பண்டிகைகள்



நவராத்திரி ஐதீகம் :-


மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.


இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது...

*நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.*

இதுவாகட்டும் இல்லை தீபாவளியாகட்டும் நம்மையே அசுரர்கள், அரக்கர்கள் என்று புராணத்திலும், இதிகாசத்திலும் சொல்லிவிட்டு.. அசுரர் குல, அரக்கர் குல தலைவர்களை அவர்களின் கடுவுளர்கள் அழித்தது போல் காண்பித்து விட்டு அதை அவர்கள் விமர்சையாக கொண்டாடுவது இருக்கட்டும், நம்மையும் கொண்டாட வைக்கிறார்களே... என்னே ஒரு சாமர்த்தியம்? பெரியாரின் தன்மானமும், சுயமரியாதையும் ,பகுத்தறிவும் இதைத் தான் நமக்கு போதித்ததா???இந்தியர்களின் பண்டிகை என்று கூறும்போதெல்லாம் நம் தனித்தன்மையை இழந்து இன்னமும் நாம் இந்திய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா என்று நினைக்கத் தோன்றுகிறது!



Friday, October 19, 2012

அணு உலை - அழிவா இல்லை அரணா???

அணு உலையை ஆதரிப்பது, எதிர்ப்பது என்கின்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணு உலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சில அரசியல் கட்சிகள் மற்றும் சில முக நூல் நண்பர்கள் மட்டுமே அணு உலை பற்றி ஆராய்ந்து அதை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் நிலையை எட...ுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும், ஆதரிக்கும் கட்சியின் நிலையை சார்ந்தே, தங்களுக்கு பிடித்தமான கட்சியின் நிலைப்பாட்டை மையமாக வைத்தே முடிவெடுக்கிறார்கள்.


அணு உலை மின்சாரத் தேவை என்பது சரியா?????

உண்மை தான் ஆனால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணு உலை மூலம் நாம் பெறும் மின்சாரம் வெறும் 3 சதவீதம் மட்டுமே...மேலும் இந்த அணு உலைகள் மூலம் 40 வருடங்கள் மட்டுமே மின்சாரம் பெற முடியும் ஆனால் அவைகள் வெளியிடும் கதிரியக்கமோ 48,00,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும்,இந்த உலைகள் மின்சாரத் தயாரிப்போடு மட்டும் தொடர்புடையது அல்ல,அணு ஆயுதத்தயாரிப்போடும் தொடர்புடையது.

அணு உலை விபத்தை பிற விபத்துக்களோடு தொடர்புபடுத்துவதோடு சரியா?????

இந்த நாகரிக உலகில் அணு உலை பற்றின பயம் தேவையில்லாதது என்கின்ற கூற்றும் பரவலாக இருக்கிறது. முன்பு மகிழுந்துவை பயன்படுத்த தயங்கினோம், ரயிலை பயன்படுத்த தயங்கினோம் மற்றும் வானூர்தியை பயன்படுத்த தயங்கினோம் ஆனால் இப்பொழுது அனைத்தும் பழக்கமாகிவிட்டது, பயன்பாட்டிற்கு வந்து விட்டது அதை போலத்தான் அணு உலையும் என்கின்ற வாதம் வாதத்திற்கு மட்டுமே பொருந்துவதாகும்.எந்த விபத்தும் அணு உலை விபத்தை போல் தலைமுறையை பாதிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது என்பதும், அணு உலை பயன்பாட்டில் இருக்கும்பொழுதே கதிரியக்கத் கழிவுகளை வெளிப்படுத்தும் என்பதும் மறைக்க/மறுக்க முடியாத உண்மையாகும்,மேலும் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்காக ஏற்படும் விபத்துக்களோடு இலட்சக்கணக்கில் விபத்துக்களை ஏற்படும் , தலைமுறை தலைமுறையை பாதிக்கும் அணு உலை விபத்துக்களோடு தொடர்பு படுத்துவதும் அறியாமையே...

கூடங்குள அணு உலை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்கின்ற கூற்று உண்மையா?????

எந்தவித நவீன தொழில் நுட்பத்தை கையாண்டிருந்தாலும் விபத்து என்று வருகின்ற பொழுது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும்,அணு உலைகள் வெளியிடும் கதிரியக்க கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே.(கதிரியக்கத்தால் வெளிப்படும் கதிர்வீச்சு கதிரியக்க மாசுவிற்கு காரணம் என்று தமிழக அரசின் இணையத்தளத்தில் இருப்பதையும், கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் பொழுது நொடிக்கு 130,000,000,000,000,000 கதிர்வீச்சி துகள்களை வெளிப்படுத்தும் என்கின்ற அய். நா. அறிவியல் குழுவின் அறிக்கையும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் அணு உலை விபத்து காப்பீடு சட்டம் - 2010, சுனாமி, ஆயுத தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் அணு உலையில் நடக்கும் விபத்துக்களுக்கு எந்த விதத்திலும் அணு உலை நிர்வாகம் பொறுப்பாகாது என்று கூறியிருப்பது என் அப்பா குதிருக்குள் இல்லை என்று கூறுவதை போல் தான் உள்ளது) மேலும் நவீன தொழில் நுட்பத்தில் செர்னோபிலில் கட்டமைத்த அணு உலை 1986-லும், புகுஷிமாவில் கட்டமைத்த அணு உலை 2011-லும் விபத்துக்குள்ளான நிகழ்வும் இங்கு கவனிக்கத்தக்கது.

சூரிய மின்சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலுமா?????

இப்பொழுது ஒரு பரவலான கருத்து நிலவுகிறது, சூரிய மின் சக்தியின் மூலம் மின் தேவையை நிறைவு செய்து கொள்ள செலவு அதிகமாகும் என்பது, இது ஒரு விதத்தில் உண்மை என்றாலும் அந்த செலவும் கூட நிலத்தை ஆக்கிரமிப்பதால் ஏற்படுவதே ஆகும், அரசாங்கம் சிறிது சிறிதாக இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அணுமின் உலையின் தேவையே எதிர்காலத்தில் இருக்காது. பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கூறும் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் வசதி படைத்த அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காத தனியார் நிறுவனங்களும் தங்களுக்கான மின் தேவையை சூரிய சக்தி மூலம் நிறைவு செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு திருவண்ணாமலையிலுள்ள ஒரு பள்ளியும், பெரியார் - நாகம்மை பல்கலைகழகமும் சூரிய சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனக்கு கிடைக்காத மற்றும் கிடைத்த உந்து சக்திகள்...

தாய்ப்பால் கிடைக்காத ஒரு குழந்தை குறைந்த பட்சம் அதற்கு இணையான ஒரு பால்,ஊட்டம் கிடைக்காதா என்று ஏங்குவதை போல் தான், பெற்றோரிடமிருந்து ஊக்கம் கிடைக்கப்பெறாத நான் அதை என் வாழ் நாளில் பலரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சில சமயம் ஏமாந்தும் கொண்டிருக்கிறேன்.


அந்த பழக்கத்தினால் தான் என்னவோ சமயங்களில் என் மகனை வாய் திறந்து ஊக்கப்படுத்தவும் தவறி விடுகிறேன், என் மனைவி சுட்டிக்காட்டும்பொழுது தான் அந்த தவறை உணர்கிறேன்.

குழந்தைகள் உங்களின் மூலமாகப் பிறந்தவர்கள், உங்களுக்காகப் பிறந்தவர்கள் அல்ல. இந்த உலகத்தை அவர்களின் கண்கள் மூலமாகவே பார்க்கட்டும், உங்களின் கண்கள் மூலமாக பார்க்க வற்புறுத்தாதீர்கள். என்ககு மிகவும் பிடித்த/பரிச்சயமான வரிகள் இவை.என் பெற்றோர் இதில் விதி விலக்கு. என் கண்களை மட்டுமல்ல பல சமயங்களில் அவர்கள் கண்களையும் சேர்த்து கட்டி கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தார்கள். இது அவர்களின் மீது குற்றம் சொல்லும் கட்டுரை அல்ல, எதிர்காலத்தில் என் மகனால் என் மீது குற்றம் சுமத்தாமலிருக்க எனக்கு எச்சரிக்கை படுத்தும் கட்டுரையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் என் வாழ் நாளில் எனக்கு ஊக்கம்/உற்சாகமளித்த நபர்களையும் நினைவு கூர்கிறேன். நினைவு கூர்வதை விட நன்றி கூர்வதே மிகவும் பொருத்தமாகும்.

என் சிறு வயதில் 5, 6 படிக்கும்பொழுது என் அம்மா வழி வந்த மாமாதான்(பாபு) எனக்கு ஹீரோ. ப்ரூஸ்லி, ஜாக்கி சான், மைக்கேல் ஜாக்சன் போன்றோரை அறிமுகப்படுத்தியது அவர் தான். நாம் வாழ்க்கையில் பயணிக்கும் வழித்தடத்திலிருந்து விலகி எதிர்படும் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவரின் மூலமாகத்தான் நான் கற்றிருக்க வேண்டும். இப்பொழுது நான் தினமும் கடைபிடித்து வரும் உடற்பயிற்சியாகட்டும் இல்லை கற்றுக்கொண்ட யோகாசனப் பயிற்சியாகட்டும், இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்புக் கலையாகட்டும் அனைத்திற்கும் அவர் தான் பிள்ளையார் சுழியாக இருந்திருக்கக் கூடும். உடற்பயிற்சி, கராத்தே, கைபந்து மற்றும் நடனம் இவைகளில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தினால் அந்த காலத்தில் அவரை நான் ஹீரோவாக நினைத்திருந்தேன்... கைபந்து மற்றும் நடனம் மேலும் பாடுவது, இசை போன்றவற்றில் எனக்கு இருந்த ஆர்வத்தையெல்லாம் என் பெற்றோர் அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து கட்டிவிட்ட கருப்பு துணியால் எப்பொழுதோ காணாமல் போய்விட்டது.

நான் இப்பொழுது எழுதும் கவிதை, கதை மற்றும் கட்டுரை போன்றவைகளுக்கு என் அப்பா தான் அச்சாரம் என்பதை நான் மறுப்பதற்கில்லை, என் அப்பா மரபுக் கவிதை எழுதுபவர்.ஆறேழு புத்தகங்கள் எழுதியிருப்பவர், தமிழ் பாட புத்தகத்திலும் அவரின் கவிதைகள் வந்திருக்கின்றன. என்ன தான் அச்சாரமாக இருந்தாலும் நான் ஆரம்ப கட்டத்தில் எழுதிய கவிதைகளை குறைந்த பட்சம் நன்றாக எழுதுகிறாய், நன்றாக இருக்கிறது என்று மனம் திறந்து, வாய் திறந்து பாராட்டியதில்லை. நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது எனக்கு கிடைத்த என் நண்பன் வீர நாராயணன் நான் எழுதி காண்பிக்கும் மொக்கை கவிதை, கதைகளை கூட பொறுமையாக படித்து உணர்ச்சி மேலிட ஒரு முக பாவனையுடன் அதை விமர்சிப்பான், அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையேது? அவன் இப்பொழுது என் கண்ணுக்கும், கருத்துக்கும் எட்டாத தொலைவில் இருக்கிறான்..இருக்கிறான் என நம்புகிறேன், நானும் இருக்கிறேன் என அவனும் நம்புவான். அந்த நம்பிக்கையில் தான் இருவரும் ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறோம்.

வாரத்திற்கொருமுறை தவறாமல் வந்து நிற்கும் தொழு நோயாளிக்கு அம்மா தரும் 1 அல்லது 2 ரூபாயை போடுவதும், முன் பின் தெரியாமல் வாசலில் வந்து நின்று கையேந்துபவருக்கு அம்மா உணவளிப்பதும் இவை போன்ற செயல்கள் தான் இன்று நான் ஈடுபடும் சில சமூக சேவைக்கு காரணமாக இருந்தாலும்,இப்பொழுது நான் மேற்கொள்ளும் எந்த சேவையையும் அவர்கள் ஆர்வமாக கேட்டறிந்ததில்லை,பாராட்டியதில்லை.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் ஏமாற்றுபவர்கள் ,அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுப்படையான விமர்சனம் சில சமயங்களில் ஏன் முன்பிருந்த நிலையிலிருந்து முரண்படுகிறார்கள் என்று நினைக்க தோன்றும்.

என் பெற்றோர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இன்று நான் ஈடுபடும் சில செயல்களுக்கு காரண்மாக இருந்தார்கள் என்ற பகிழ்ச்சி இருந்தாலும் ஏன் அவர்கள் அந்த செயல்களை வெளிப்ப்டையாக பாராட்டியதில்லை என்கின்ற ஆதங்கம் இன்றும் என் அடி மனத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இலயோலாவில் முது நிலை கணிப்பொறி கல்வி படிக்கும்பொழுது நான் சந்தித்த இரு நபர்கள் என் வாழ்வில் முக்கிய உந்து சக்திகளாக இருந்தனர் என்பதை இப்பொழுது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். ஒருவன் எனது நண்பன் வின்ஸ்டன்...ஒரு சந்தர்ப்பத்தில் நூலகத்தில் புத்தகம் எடுக்கும்பொழுது எதேச்சையாக தமிழ் பிரிவிற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம், அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தபொழுது ஜெயகாந்தன் முதல் முதலாக நெருக்கமாக பரிச்சயமானார்,அவனுக்குக் கூட. அதன் பிறகே குழந்தைதனமில்லாமல் யதார்த்தமாகவும், முதிர்ச்சியாகவும் சிறுகதைகள் எழுதும் ஆர்வம் எழுந்தது. அந்த சிறுகதைகளை படித்து அவன் வைத்த விமர்சனம் என் கதைகளில் ஜெயகாந்தனின் சாயல் தெரிகிறது என்று...ஆமாம் இன்றுவரை அவரின் சாயல் இல்லாமல் ஒரு சிறுகதையையும் என்னால் எழுத முடியவில்லை.

அடுத்த நபர் கணிப்பொறி முதல் வருடத்தில் பாடம் எடுத்த எங்களை விட 3 வயது மூத்த கணிப்பொறி ஆசிரியை ஜார்ஜிட்டா, அந்த வருடம் தான் அவர் தனது முது நிலை கல்வியை முடித்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்ததால் அவருக்கு தான் ஆசிரியை என்கின்ற நினைப்பை விட , எங்களில் ஒருவர் என்கின்ற நினைப்பே அதிகமாக இருக்கும். அவரின் வகுப்பில் விளையாட்டுத்தனங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் என் கவிதை டைரியை படித்த அவர் வெளிப்படையாக வைத்த விமர்சனம்... நேற்றிரவு வேலைப்பளு காரணமாக இருந்த தலைவலி உன் கவிதையை படித்தது மூலம் நீங்கியது என்று. எனக்கு அந்த பாராட்டு வித்தியாசமான உந்து சக்தியாக இருந்தது. அதன் பிறகு நிறைய கவிதைகள் எழுதி அவர்களிடம் காண்பித்திருக்கிறேன் அவர்களின் தலைவலி நீங்க வேண்டும் என்பதற்காக அல்ல... நான் மேலும் உந்து சக்தி பெற வேண்டும் என்கின்ற சுயனலத்திற்காக!

சமீப காலத்தில் எனக்கு கிடைத்த உந்து சக்தி...அந்த நபர் கொஞ்சம்...கொஞ்ச நஞ்சமல்ல மிகவுமே வித்தியாசமானவர் நான் சந்தித்த நபர்களில்...அலுவலக வேலைக்காக இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும்பொழுது சந்தித்த நபர் மணிமேகலை. ஒரு 6 மாதம் கழித்து மிகவும் பரிச்சயமான தமிழ் முகத்தை பார்த்த மகிழ்ச்சியில் தான் முதல் முதலாக அவர்களிடம் பேசினேன். என் கவிதை மற்றும் கதைகளை அவர்கள் பாராட்டும் விதம் மிகவும் எளிது. ஆங்கிலத்தின் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நன்று என்கின்ற ஒற்றை வார்த்தையில் தான் அந்த பாராட்டு இருக்கும். எளிதான அந்த பாராட்டு மிகவும் வலிதான ஒன்றாக இருந்தது, மேலும் எழுதத் தூண்டியது.

என் அனுபவத்தை பதிவு செய்யும் இந்த கட்டுரை மூலம் எனக்கு கிடைத்த அனுபவமாக நான் பதிவு செய்ய விரும்புவது இரண்டு விடயங்கள்.

ஒன்று, நம்மை உற்சாகப்படுத்தும் உந்து சக்திகளாக, ஊக்க சக்திகளாக நாம் சந்திக்கும் நபர்களை விட நாம் சந்திக்கும் அனுபவங்களையும் , நாம் படிக்கும் புத்தகங்களையும் கொள்வதே சிறந்தது, ஏனெனில் அவைகள் தான் எப்பொழுதும், என்னேரமும், எந்த சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டு அகலாது, அதனால் நாம் ஏமாற்றமடைய வேண்டிய அவசியமே இருக்காது.

இன்னொன்று, நம் சந்ததிக்கு உந்து சக்திகளாக இருக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, ஏனெனில் அவர்களின் பார்வையில் நாம் தான் ஹீரோ, அந்த பிம்பத்தை உடைத்துவிட்டால் அந்த ஏமாற்றம் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கும், அவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் அதே வேளையில் பாராட்டவும்,விமர்சிக்கவும், ஊக்குவிக்கவும் நாம் மறந்து விடக்கூடாது, அவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கு உந்து சக்திகளாக நாம் இருக்கும் கட்மையை சரிவர செய்தால் அதைவிட மகிழ்ச்சி தரும் விடயம் அவர்களுக்கு வேறொன்றும் இல்லை.

Tuesday, October 2, 2012

சிவாஜி - மேல் தட்டு வர்க்கத்தினால் கைப்பாவையாக்கப்பட்ட அடிமை!!!

சிவாஜி எதிரிகளை வீழ்த்துவதில் மாவீரன்,அடிமைப்பட்டு கிடந்த மராத்திய மண்ணை மீட்டெடுத்ததில் தீரன், விடுதலை வேட்கை கொண்ட மண்ணின் மைந்தன் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமுமில்லை.


பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ்,சங் பரிவார்,சிவ சேனா கூட்டங்கள் மட்டுமல்ல மராத்திய மண்ணில் உள்ள அனைத்து மேல் தட்டு வர்க்கமும் சிவாஜியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதில...் சிவாஜியின் வீரம் மட்டும் தான் காரணமா இல்லை இதற்கும் மேல் ஏதாவது இருக்குமா என்று சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியாது, சிவாஜியை எந்த நேரத்திலும்/ எந்த காலத்திலும் அந்தக் கூட்டம் விட்டுக் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ் நாளில் போராடிய மராத்தியத்தின் அம்பேத்காரை புகழாத இந்த கூட்டம், பெரியார் மற்றும் அம்பேத்காருக்கு அரை நூற்றாண்டு முன்பே மேலாதிக்க சாதி திமிருக்கு சாட்டை அடி கொடுத்த மராத்திய மகாத்மா ஜோதிராவ் பூலேவை புகழாத இந்த கூட்டம் , சிவாஜியை மட்டும் இந்த அளவுக்கு புகழ்வதேன் ? அவரை விட்டுக் கொடுக்க முனையாதது ஏன்???

1664 முதல் 1670 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்தார் சிவாஜி, அப்பொழுது முகலாய மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சி தான் இந்தியா பெரும்பான்மையும் இருந்தது. அவர்கள் இருவரும் ஹிந்துவாக இருக்கும் பட்சத்திலும் இல்லை முஸ்லீமாக இருக்கும் பட்சத்திலும் பேரரசர் - சிற்றரசர் என்கின்ற அடிப்படையில் அங்கு போர் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் ஆனால் அவர்களுக்கு இடையே நடந்த போரை ஹிந்து - முஸ்லீம் போராக திரித்தது மேற்சொன்ன கூட்டத்தின் மதவெறி பார்வை.


அடுத்து அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்ஜியம் பல்வேறு வரலாற்று உண்மைகளை தோலுரித்துக் காட்டியது, என்ன தான் சிவாஜி எதிரிகளின் மீது வெற்றி கொண்டாலும், அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்போது இன்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கூட்டம் சம்மதிக்கவில்லை. அவரின் குலம் ஆளப்பிறந்த குலம் அல்ல என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர்,அதற்கு பிறகு காகப்பட்டரிடம் அவர் அடைக்கலம் புகுந்தபின்னரே அவரால் ஆட்சி கட்டலில் ஏற முடிந்தது, களத்தில் போர் வீரனான சிவாஜி அடிமை பட்டத்துடனே ஆட்சிக்கட்டிலில் ஏற முடிந்தது. சிவாஜியின் அரசாங்கமும் மேல் தட்டு வர்க்கத்தின் அனுசரனையோடும்,அவர்களுக்கு சாதகமாகவும், அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவுமே அமைந்தது என்பது வரலாற்று உண்மை. நன்றி - சுபவீ வலைப்பூ

Monday, October 1, 2012

ஹிந்தி ஹிந்தியாவின் தேசிய மொழியா??? அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழியா???

இந்த கேள்வியே மிகவும் அபத்தமானது. ஹிந்தியா ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தான் இருந்தது அதற்கு பிறகு ஹிந்தி வெறி கொண்ட சில ஆட்சியாளர்களால் பிரச்சினை சிறிது சிறிதாக தலை தூக்க ஆரம்பித்தது, அதற்கு எதிர்ப்பு வலுக்கும் பொழுது 1959-இல் நேருவின் உறுதி மொழியும் அதையொட்டி 1963-இல் அலுவல் மொழி சட்டமும் இயற்றப்பட்டது.


 நேருவின் உறுதிமொழி :- I believe also two things. As I just said, there must be no imposition. Secondly, for an indefinite period - I do not know how long - I should have, I would have English as an associate, additional language which can be used not because of facilities and all that... but because I do not wish the people of Non-Hindi areas to feel that certain doors of advance are closed to them because they are forced to correspond - the Government, I mean - in the Hindi language. They can correspond in English. So I could have it as an alternate language as long as people require it and the decision for that - I would leave not to the Hindi-knowing people, but to the non Hindi-knowing people  

இந்த உறுதிமொழியின் வாயிலாக இயற்றப்பட்ட அலுவல் மொழி சட்டத்தின்(என்ன தான் நேருவின் உறுதி மொழியை இந்த சட்டம் பிரதிபலித்தாலும் பல்வேறு இடைச்செருகல்கள் ஹிந்தி வெறியர்களால் திணிக்கப்பட்டது ) பிரச்சினைக்குரிய பகுதி (ஹிந்தி வெறியர்களால் பிரச்சினை கிளப்பப்பட்ட...) :- Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language MAY, as from the appointed day, continue to be used, in addition to Hindi

Instead of SHALL,they added MAY without listening others (Obviously Non-Hindi Speaking leaders and people)

அண்ணா எதற்கு ஹிந்தியை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்க எதிர்த்தார் என்கின்ற காரணத்தை அவர் வாயிலாக அறிவதும் இங்கு அவசியமாகிறது.
"If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us. We will be treated like third rate citizens". (Anti-Hindi Imposition Rally, Chennai Marina (Madras Marina), April 29, 1963)


"Making a language (Hindi) that is the mother tongue of a region of India the official language for all the people of India is tyranny. We believe that it will give benefits and superiority to one region (the Hindi-speaking region).... This and future generations in non-Hindi areas will suffer immeasurable hardships... Making Hindi the official language of India would destroy the age old language and culture of Tamil Nadu". (Court Trial for burning the Constitution of India to show opposition to Hindi imposition, December 3, 1963).

மேலும் ராஜ்யசபாவில் ஒரு உறுப்பினர் அண்ணாவிடம் பின்வருமாறு கூறினார்..."ராஜ்ய சபாவில் ஹிந்தி பேசுபவர்கள் அதிகம் அதனால் ஹிந்தியை தேசியமொழியாக அறிவிக்க வேண்டுமென்றார்." அதற்கு அண்ணா பின்வருமாறு பதிலுரைத்தார் "ஹிந்தியாவில் காகம் தான் அதிகம், ஏன் காக்கையை விட்டு விட்டு மயிலை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும்?", எந்தவொரு வரைமுறையும், சட்ட திட்டமும் இல்லாமல் அவர்கள் விருப்பத்திற்கிணங்க திணிப்பதை சுயமரியாதையுள்ள எந்த இனமும் , எந்தவொரு மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஹிந்தி பேசாத மக்களின் எண்ண ஓட்ட்மாக இருந்தது, இருக்கிறது, தமிழர்கள் மட்டும் தான் ஹிந்தியை எதிர்ப்பதாக பரவலாக ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, இது முற்றிலும் தவறானது. பால் தாக்கரே எதிர்க்கிறார், குஜராத் உயர் நீதி மன்றத்தின் சமீபத்திய ஆட்சி மொழி சம்பந்தப்பட்ட தீர்ப்பு தெளிவாக்குகிறது ஹிந்தி ஹிந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று.



Sunday, September 9, 2012

வாழ்வின் அர்த்தம் என்ன?????


இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முடியாமலும், பதில் தெரியாமலும் 100 க்கு 98 சதவீத பிணங்கள் மயானத்திலும்,கல்லறையிலும் தினம் தினம் நிம்மதியில்லாமல் செத்துக்கொண்டிருக்கின்றன!!!


இந்த கேள்வியைப் பற்றி கவலைபடாமலும்..., இதற்கு பதில் தேடியும் பல நடைபிணங்கள் நம்மிடையே அனுதினம் உலாவிக்கொண்டிருக்கின்றன... நானாகவும், நீங்களாகவும்!!!


இதற்கான பதில் நம் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் அனுபவத்திற்கும், வயதிற்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்திருக்கும்.


நான் ஆறாவது வகுப்பு படிக்கையில் என்னைவிட ஒரு வயது மூத்த இளங்குமரன் தமிழ் பேச்சுப்போட்டியில் தனக்கே உரித்தான பாணியில் உச்சரிப்பையும், கருத்துச் செறிவையும் அள்ளி வீசும்பொழுது, தள்ளி நின்று ரசித்து அவனைபோல பேசி இந்த பார் ஏட்டிடம் பாராட்டை வாங்கிவிட வேண்டுமென்பது வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


மாடு மேய்க்கதான் போகனும்,பிச்ச தான் எடுக்கனும் நல்ல மார்க் எடுக்கலைனா... என்று அப்பா அடிக்கடி வயிற்றில் புளியை(புளி மட்டுமா...மிளகு,கடுகு என்று அனைத்தையும் தான்!) கரைக்கும்பொழுது,எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து விட வேண்டுமே என்பது பத்தாம் வகுப்பு படிக்கையில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


டேய் ஒரு 100 ரூவா உன்னால ரெடி பண்ண முடியாதாடா... என்று மதுபானக்கடையில் அமர்ந்து கொண்டு, இங்க பாருங்கடா இனிமே மாசத்துல ஒரு தடவையாவது கண்டிப்பா தண்ணி அடிக்கனும். சரக்கு, சைடிஷுக்கெல்லாம் சேத்து 100 ரூவா போதும்,எப்படியாவது ரெடி பண்ணிடுங்க என்று பள்ளித்தோழர்களிடம் வியாக்கியானம் பேசி வரையறையை முடிவு செய்தது அந்த நேரத்தில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


முதல் முறையாக கல்லூரியில் இடம்...முதல் காதல்...முதல் வேலை...திருமணம்...முதல் வெளி நாட்டு பயணம் இப்படியாக அனைத்து முதலுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வாழ்வின் அர்த்தத்ததிற்கான பதிலாகவும் அந்தந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.


இதற்கு அப்பாற்பட்டு சிறு வயதிலிருந்து நான் சந்தித்த சில விடயங்கள், நபர்கள் என் கவனத்தை இப்பொழுது அதன் பக்கம் ஈர்க்க வைக்கிறது.....சற்றே கவனத்தை சிதற வைக்கிறது.


வாரம் ஒரு முறை தவறாமல் வீட்டு வாசலில் கை ஏந்தி நிற்கும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்.


பசியின் கொடுமையால் தன்மானத்தை மறந்து தன் மானத்தை மறைக்க ஏதும் இல்லாது என்னை கும்பிட்ட வறியவர்.


வெயிலில் நடந்தாலே நொந்து போகும் நமக்கு மத்தியில் உடல் வெந்து போனாலும் தார் சாலையில் படுத்துறங்கும் பெரியவர்.


வேலை, வேலை என்று அலைந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து மேல் சொத்து சேர்த்து , மூன்று வேலையும் நன்றாக உண்டு அதில் சிறிது உடலுக்குள் சேர்த்து,கழிவை வெளித்தள்ளியே காலம் தள்ளும் நமக்கு இதை பற்றிய சிந்தனை,செயலெல்லாம் மிகவும் அரிதென்பதை என்னவென்று சொல்ல.


என்ன தான் நல்ல வேலை கிடைத்ததும் சில சமுதாய சேவையில் நேரத்தையும் , சிந்தனையையும், செயலையும் நான் செலவழித்தாலும் காலம் போகிற போக்கில் சுய நல புதை குழிக்குள் சிக்கி பழகிக்கொண்ட இந்த மூளை கடிவாளம் போட்ட குதிரையாகவும் , கீ கொடுத்த எந்திரமாகவும் பயணிப்பதிலேயே வழக்கமாகக் கொண்டு விட்டது.


இந்த நேரத்தில் தான் எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலருக்கு இவர் கடவுள். வேறு பலருக்கோ இவர் பிழைக்க தெரியாதவர்,முட்டாள்,பைத்தியம்...இவருக்கு முன்பு நாம் ஒன்றுமில்லை ஆனால் இது போல் ஏதாவது ஒன்றை நம்மால் முடிந்த அளவிலாவது நாம் செய்யாமலிருந்தால் நம் வாழ்விற்கு அர்த்தமுமில்லை... இப்படியாக வாழ்வின் அர்த்தம் தேடிக்கொண்டும், தேடிய அர்த்தம் கிடைத்தாலும் அதில் முழுமையாக ஈடுபடாத குற்ற உணர்ச்சி கொண்ட மனத்துடன் பயணிக்கும் உங்களுடன் சேர்ந்த நானும், என் மூளையும்!!!!!!


http://ibnlive.in.com/news/real-hero-krishnan-gets-international-recognition/243324-62-128.html

Monday, September 3, 2012

இன்றைய அனுபவம் (01.09.2012) - தலைமுறை படிப்பினை


என் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க எப்பொழுதும் போல இந்த வாரமும் நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தேன். (குறிப்பு :- அவனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் அளவிற்கு நான் ஒன்றும் கை தேர்ந்த..... கால் தேர்ந்த பயிற்ச...ியாளன் எல்லாம் ஒன்றும் இல்லை,3 வயதை நெருங்கும் அவன் கற்றுக்கொள்ளும் அதே நீச்சலை நான் 30 வயதில் கற்றுக் கொண்டு அவனுக்கும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வளவு தான்!)

அங்கு ஒரு மெக்ஸிகன் குடும்பம். 35 அல்லது 40 வயதையொத்த ஒருவர் 5 சிறுவர்களோடு(10 வயதிற்கு கீழ் தான் அனைவர் வயதும் இருக்கும்) ,அதில் இளைய வயதுடைய சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். நான் இதுவரை நீச்சலில் கற்றுக்கொண்டது சாதாரண நீச்சல்,தண்ணீருள் மூழ்கி நீந்துவது,தண்ணீரில் மிதப்பது(தலை கீழ் நோக்கி). நான் மிதப்பதை அந்த சிறுவர்களில் ஒருவன் ஆச்சரியமாக பார்த்து எப்படி மிதக்கிறீர்கள் என்று கேட்டான், அவனுக்கு ஒரு 7 வயது இருக்கலாம். நானும் அவனுக்கு மூச்சை அடக்கிக்கொண்டால் இவ்விதம் மிதப்பது சுலமபென விளக்கினேன். அடுத்த நிமிடமே அந்த சிறுவன் அவ்வாறு மிதந்து காண்பித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்புறமாக மிதந்து செல்வது எப்படி என்பதை எனக்கு செய்து காண்பித்தான்,மேலும் த்லை மேல் நோக்கி மிதப்பதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

என்னிடம் நீச்சலில் போட்டி போடலாமா என்று கேட்டான். நானும் உன்னை போல் தான்... இப்பொழுது தான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கிறேன்,உன்னளவிற்கு கூட நீச்சலில் நான் சிறந்தவன் அல்ல என்று விளையாட்டாகக் கூறினேன் அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அந்த சிறுவர்களின் நீச்சல் நேர்த்தி அவ்வளவு அற்புதமாக இருந்தது.என்னை அவன் நீச்சலில் சிறந்தவனாக தவறுதலாக நினைத்திருக்கக் கூடும்! நான் தண்ணீருக்குள் நீந்துவதை பார்த்தும், மிதப்பதை பார்த்தும் அவன் எனக்கு கொடுத்த பாராட்டு பத்திரம்... நீங்கள் சிறப்பாக நீந்துபவராக இருக்க முடியும் என்பது.....அவனின் பாராட்டு மகிழ்ச்சி அளித்தாலும்,அவன் கூறிய மறு நிமிடம் என்னை சற்றே பின்னோக்கி பார்த்தேன்...கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத பின்னோக்கிய பயணம் அது, கிட்டத்தட்ட 25 வருட பின்னோக்கிய பயணம்.

நான் கற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொரு விடயத்திற்கும் அது கவிதையாகட்டும்,உடற்பயிற்சியாகட்டும்,தற்காப்பு கலையாகட்டும்,விளையாட்டாகட்டும் என் பெற்றோர் தரும் விமர்சனம்... முதல்ல படிக்குற வழிய பாரு, படிக்கும் போது வேறெங்கையும் கவனம் சிதறக்கூடாது என்பது. நான் என் பெற்றோரை குறை சொல்லவில்லை அவர்களை போல இருக்கும் பல பெற்றோர்களின் மன நிலைக்காக வருத்தப்படுகிறேன் முக்கியமாக நமது நாட்டில்...

ஒரு கோடைக்காலத்தில் நான் கற்றுக்கொள்ள சென்ற கைப்பந்தாட்டம் கூட சூட்டோடு சூடாக கோடை முடிந்ததமும் சோடை போனது!

பிற்காலத்தில் நான் வேலைக்கு சென்றதும் நான் கற்றுக்கொள்ள நினைத்த விடயங்களை கற்றுக்கொள்ளும்போதும் கூட அவர்கள் வைத்த விமர்சனம்...இதெல்லாம் கத்துட்டு என்ன பண்ண போற என்பது. அவர்கள் மன நிலை மாறவில்லை,அவர்களை குற்றம் சொல்வதை விட என் தலைமுறைக்கு மாறிய மன நிலையை நான் தருவதே சரியானதாகும்.

ஆரம்பகாலத்தில் அவர்களின் உந்துசக்தி கிடைக்காததால்தான் என்னவோ,பிற்காலத்தில் எனக்கு உந்து சக்திகளாக கிடைத்த நபர்கள் பலரை சந்தர்ப்ப சூழ்னிலை காரணமாக இழக்கும்பொழுது மிகவும் வருந்தியிருக்கிறேன்.

நம் தலைமுறைக்கு படிப்பிற்கு அப்பாற்பட்டு அனைத்து விடயங்களையும் நாம் சொல்லித்தர வேண்டும், அவர்களின் விருப்பமும், ஆர்வமும் எதில் இருக்கிறதோ அதை ஊக்கப்படுத்த வேண்டும், நிச்சயமாக அதில் அவர்கள் சிறந்தவர்களாக வர முடியும்,வருவார்கள். படிப்பை எந்த விதத்திலும் அந்த விடயங்கள் தடை செய்யாது, இன்னும் சொல்லப்போனால் அவர்களின் மன நிலை,உடல் திறன் மேம்பட்டு படிப்பில் சாதிக்க அந்த விடயங்கள் உறுதுணையாகவே அமையும்.

என் வாழ்க்கை 30 வயதை கடந்து விட்டது,இப்பொழுது என் மகனை திரும்பி பார்த்தேன். பாதுகாப்பு வளையத்தின் உள்ளே தன் கை ,கால்களின் மூலம் நீச்சலுக்கான அச்சாணியை அடித்துக்கொண்டிருந்தான்.ஒரு 25 அல்லது 30 வருடங்கள் கழித்து அவன் தன் வாழ்வை பின்னோக்கி திரும்பி பார்த்து வருத்தப்படும் நிலையில் இருக்கக்கூடாது என்பதிலேயே எனது கவனம் அதிகமாக இருந்தது.

குழந்தைகள் நம் மூலமாகப் பிறந்தவர்கள், நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல. இந்த உலகை அவர்கள் கண்கள் மூலமாகவே பார்க்கட்டும், உங்களின் கண்கள் மூலமாக பார்க்க நீங்கள் வற்புறுத்தாதீர்கள். அவர்களின் பார்வைக்கு உறுதுணையாகவும்,உந்து சக்தியாகவும் இருங்கள்... எனக்கு பிகவும் பிடித்த,பரிச்சயமான வரிகள் இவை. இந்த உலகை காணும் வாசல் அனைத்தையும் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறேன் என் மகனுக்காக...அவனின் கண்கள் மூலமாக எந்த வாசலில் இந்த உலகை காண விருப்பபடுகிறானோ அது அவன் விருப்பம். அந்த வாசலில் அவனுக்கு உறுதுணையாகவும்,உந்து சக்தியாகவும் என் தோள்களும்,விமர்சனங்களும் இருக்கும்.....

Monday, August 27, 2012

இன்றைய அனுபவம் (26.08.2012) - கர்த்தாவே இவர்களை மன்னியும்


எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் மனைவியை திருப்திபடுத்தும் நோக்கில் சென்னையில் இருக்கும்பொழுது ஞாயிறு திருப்பலிக்கு செல்வது வழக்கம். அந்த ஒரு மணி நேரம் தேவாலயத்திற்கு வெளியே தனிமையுடனும் பிறகு மகனுடனும் நேரம் செலவழிப்பது வழக்கம்.

அமெரிக்காவிற்கு வந்த பிறகு நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அரைமணி நேரம் தொலைவில் இருக்கும் காலனி என்கின்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் மாதம் ஒருமுறை நடக்கும் தமிழ் திருப்பலியில் பங்கு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். என் மனைவிக்கு திருப்பலியில் பங்கு பெற்ற திருப்தி. எனக்கும், என் மகனுக்கும் ஒரு சுற்றுலா செல்வது போன்ற மகிழ்ச்சி!

நேற்றைய திருப்பலியில்(26 ஆகஸ்ட் 2012) பிரசங்கத்தின் மையக்கருத்து இது தான். நம் நினைப்பை, சிந்தனையை கடவுள் அறிவார்.இதே கருத்து ஹிந்து மதத்திலும் சொல்லப்படுவது உண்டு. இசுலாமிய மதம் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை.

இந்த கருத்தை பாதிரியார் கூறியபொழுது, அங்கு இருந்த கிட்டத்தட்ட 70 பேரும் மிகவும் ஆழமாகவும்,உன்னிப்பாகவும் கவனித்துக்கொண்டிருந்தனர்.பெரியார் ஊட்டிய பகுத்தறிவு அந்த அனைவரையும் இயேசு நாதர் கூறிய ஆட்டு மந்தைகள் போன்று உணரவைத்தது. என்னால் நிலை கொள்ள முடியவில்லை. அங்கேயே எழுந்து என் சந்தேகத்தை கேட்க வேண்டுமென தோன்றியது, ஆனால் இடம்,பொருள்,ஏவல் கருதி அமைதியாக இருந்து விட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு பாட்டு புத்தகத்தில் என் சந்தேகத்தை எழுதி வைத்தேன்....பார்ப்பவர்கள்,படிப்பவர்கள் சிந்தனைக்கு. அந்த சந்தேகத்தை பாதிரியாரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப இருக்கிறேன். எனக்கு உதித்த சந்தேகம் உங்களின் கவனத்திற்கு, சிந்தனைக்கு.....

" நம் நினைப்பை, சிந்தனையை அந்த கடவுள் அறிந்தால் நம் சிந்தனையில் , நினைப்பில் உதிக்கும் கொலை,கொள்ளை போன்ற நிகழ்வுகளையும் அந்த கடவுள் அறிவார் தானே??? நம் நினைப்பை,சிந்தனையை அறியும் சக்தி படைத்த அந்த கடவுளுக்கு தீய எண்ணங்களை மாற்றும் சக்தியோ, அந்த நிகழ்வுகளை தடுக்கும் சக்தியோ இல்லாமல் இருப்பதேன்?????"

தெரிந்தால் சொல்லுங்கள்.....

Thursday, April 19, 2012

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா 3

பிளேக் நோய் வந்தபோது, அதற்குக் காரணமான எலிகளை வெள்ளைக்காரர்கள் வேட்டையாடியபோது நமது விநாயகப் பெருமானின் வாகனம் எலி, இந்த வெள்ளைக்கார மிலேச்சர்கள் நமது மதத்தில் தலையிடுகிறார்கள் என்று வெறி உணர்ச்சியை ஊட்டியதன் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட பக்தர்கள் இரு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று விட்டனர். இதன் பின்னணியிலிருந்து தூண்டியவர் என்பதால் இவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சட்டசபையில் இட ஒதுக்கீட்டைக் கேட்டபோது ‘சட்டத்திற்குக் கீழ்ப்படிவதே உங்கள் கடமை. சட்டம் இயற்றுவதை பிராமணர்களிடம் விட்டுவிடுங்கள்’ என்று கருத்து சொன்னவர்.

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்தவுணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) "இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Gobblers, The oil Mongers and Petty-Traders) சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா? (டாக்டர் அம்பேத்கர் அவர்களின் காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூல்)என்று கருத்துரைத்தவர் சுயராஜ்ஜியம் எமது பிறப்புரிமை என்று முழங்கியவரும் இந்திய மக்களால் லோக மான்ய திலகர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட பால கங்காதர திலகர்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதிகள் என்கின்ற வரிசையில் வரும் திலகர் மற்றும் அவரை பின் தொடர்ந்தோரும், மிதவாதிகள் என்று அழைக்கப்பட்ட கோகலே,காந்தி மற்றும் அவரை பின் தொடர்ந்தோரும் வெள்ளையர்களை எதிர்ப்பதை விட வர்ணாசிரம ஹிந்து தர்மத்தை காப்பதில் தீவிரவாத மற்றும் மிதவாத போக்கை கொண்டிருந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை, தீவிரவாதிகளிடமிருந்து விதி விலக்காக பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் இந்த வர்ணாசிரம தர்மத்திற்கு அப்பாற்பட்டு வெள்ளையனை எதிர்ப்பதில் குறியாக இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இவர்களிடமிருந்து மிகவும் அப்பாற்பட்டு வடக்கே ஜோதிபா பூலே, அம்பேத்கார் போன்றவர்களும் தெற்கே நாராயண குரு,அயோத்திதாசர்,ரெட்டை மலை சீனிவாசன் மற்றும் பெரியார் போன்றவர்கள் அரசியல் விடுதலையை விட சமூக விடுதலையில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதும் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.

Saturday, March 17, 2012

தமிழ் ஹிந்து

சமீபகாலமாக இப்படி ஒரு இணையதளம் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.....அதன் பெயர் என்னவோ தமிழ் இந்து என்பது தான் , நான் அதை கொஞ்சம் திருத்தி சம்ஸ்கிருத வார்த்தை பயன்படுத்தி ஹிந்து என்று அழைப்பதன் காரணம்,இந்து அல்லது ஹிந்து என்பதன் அடிப்படையே சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதத்தோடு வேண்டுமானால் அதனை இணைத்துக்கொள்ளலாம் ,தமிழோடு இணைப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலையே!!!

தமிழையும் ஹிந்துவையும் இணைப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...ஹிந்த் என்கின்ற நிலப்பரப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் அடக்கமாம்,ஆகையால் தமிழ் பாரம்பரியமும் அதனுள் அடக்கமாம்.,அதனால் தமிழர்களும் இந்துக்களாம் என்ன பேத்தலாக இருக்கிறது!? ஒரு காலனியில் ஆத்திகர்கள் 15 பேர் 15 வீட்டில் இருப்பதாக கொள்வோம்,ஒரு நாத்திகன் ஒரு வீட்டில் இருக்கிறான். அந்த காலனிக்கென்ற என்ன தான் ஒரு சட்ட திட்டங்கள் இருந்தாலும்,அந்த காலனியை நிர்வகிப்பரும் ஆத்திகராக இருந்தாலும்,அந்த காலனியின் பெயர் ஸ்ரீ ராம விலாஸாக இருந்தாலுமே கூட என்னுடைய அடையாளம் நாத்திகன் என்பதே... நான் எப்படி அந்த குட்டைக்குள்...அதாவது அந்த குடைக்குள் வர முடியும்!!!

சங்க கால இலக்கியங்களிலும் இராமாயண,மகாபாரத குறிப்புகள் இருக்கின்றன. என்ன தான் புராண இலக்கிய காலத்திற்கு பிறகு தழுவல்கள்,மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் இருந்தாலும் சங்க காலத்திலும் ஆங்காங்கே குறிப்புகள் இருப்பதை மறுக்க முடியாது,மறைப்பதற்கும் இல்லை.(சங்கம் என்கின்ற சொல்லே வடமொழியின் ஆதிக்கம் தான்) உதாரணமாக கி.பி.ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சின்னமனூர் செப்பேட்டில் பின்வருமாறு இருக்கிறது அது ஒரு பாண்டிய செப்பேடு.... மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் (பாண்டியர் செப்பேடு: பத்து) மகாபாரதத்தை மொழி பெயர்த்த செய்தி அது,ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. அதாவது வட மொழியை சேர்ந்த புராணங்கள்,இதிகாசங்கள் அவர்களது ஹிந்து என்று சொல்லப்படுகிற சமஸ்கிருத மதமோ,ஆரிய மதமோ,அந்த பாரம்பரியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்பதையும் மறுக்கவோ/மறைக்கவோ முடியாதே....தமிழ் பாரம்பரியம் தனிப்பட்ட பாரம்பரியம் தான்...அந்த பாரம்பரியத்திற்கு சமஸ்கிருதமோ,ஆங்கிலமோ,உருதுவோ வந்தேறி மொழி தான் அந்த மொழிகளை சார்ந்த இனமும்,அவர்களின் பாரம்பரியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வந்தேறிகள் தான்.

சிவன் மற்றும் சைவ மடங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுவதாக சிலர் சொல்லலாம். சிவனின் அடிப்படை சீவன் என்பது...உயிரே மூலம்,சக்தியே மூலம்...தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த சித்தர்கள் உரைத்ததே அவை...அதுவே பின்பு வடமொழியின் ஆதிக்கத்தால் சீவன் ஜீவனாக மாறியது...சிவ வழிபாடு,சக்தி வழிபாடே ஆதி தமிழனின் இறை வழ்பாடென சொல்வதும் உண்டு....பின்பு உங்களின்...அதாவது சமஸ்கிருத ஹிந்து ஆதிக்கத்தில் பல்வேறு கன்றாவி கதைகள் இறக்குமதியாயின...சிவன் ருத்த்ரன் ஆனார்,தமிழ் முருகன் சுப்ரமணியன் ஆனார்.சிவனை பற்றின கதைகள் ஆகட்டும்,அய்யப்பன் பிறந்த கதைகள் ஆகட்டும்,தீபாவளி கொண்டாடுவதன் காரணமாகட்டும்.இந்த சமஸ்கிருத தாக்கம் தொல்காப்பிய காலத்திற்கே முற்பட்டே இருந்திருக்கிறது(தொல்காப்பியனை பெரியார் ஆரிய கைக்கூலி என்று கூறியதில் தவறேதும் இல்லை தான்!)பின்வரும் இணையத்தை பாருங்கள்....தாக்கத்தை புரிந்து கொள்ள.....http://alivetamil.blogspot.com/2011/08/north-language-alivetamil-blog.html ஆதலால் சிவன் கோயிலில்,சைவ மடங்களில் தமிழில் நடைபெறும் அர்ச்சனை எங்களுக்கு பெரிய ஆச்சிரியத்தை தராது.உங்களுக்கு தேவை என்றால் தமிழ் நேச பாஷை, சிதம்பரம் நடராஜர் கோயில்ல தமிழில் அர்ச்ச்னை பண்ண வேண்டும் என்று ஆறுமுக நாவலர் போராடின பொழுது அது நீச பாஷை,சூத்திர பாஷை.....எந்த தன்மானமுள்ள,பகுத்தறிவுள்ள தமிழனும் தமிழ் ஹிந்து என்கின்ற ஒரு வட்டத்திற்கும் வரவே முடியாது, ஹிந்து சமுதாயத்தின் சாதி நிலையை முதலில் களைந்தெடும்(ஆமாம் மனுஸ்மிருதியும் தமிழ் பாரம்பரியத்தின் மீதான சமஸ்கிருத ஆதிக்கம் தானே, நம் மன்னர்கள் அந்த தாக்கத்திற்கு உட்பட்டு அதை நீதியாக நினைத்து அதையும் காக்கத் தொடங்கினார்கள்!?),அதற்கு பிறகு தமிழையும் ,தமிழர்களையும் நீங்கள் விளக்குகின்ற ஹிந்து என்கின்ற வட்டத்துற்குள் வருவது பற்றி யோசிக்கலாம்.

ஆரியத்தாக்கத்தை, வட மொழி சமஸ்கிருத ஆதிக்கத்தை உள் வாங்கிக் கொண்ட இலக்கியங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சமூகம் சத்தியமாக சுய மரியாதை அற்ற சமூகம் தான்.....தமிழ் இலக்கியங்களின் மீதான வடமொழி ஆதிக்கம்...இதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.என்ன தான் பாலில் தண்ணியை கலந்தாலும் பால் வேறு,தண்ணி வேறு தான். அதை இரண்டையும் கலந்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதற்காக...அதற்கு என்ன தான் கவர்ச்சிகரமான பெயர் வைத்தாலும் அது இரண்டும் ஒன்று ஆகா...பிரித்தெடுப்பது சிரமம் தான், ஆனால் நாங்கள் பிரித்து பார்க்கவே விரும்புகிறோம் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதற்காக...இது தான் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பகுத்தறிவு ,சுய மரியாதை....அது சங்க இலக்கியமாக இருந்தாலும் சரி,தொல்காப்பியமாக இருந்தாலும் சரி...திருக்குறளாக இருந்தாலும் சரி. இடம் ,பொருள்,காலம் மற்றும் மரபு அடிப்படையில் எங்களுக்கு போடும் பிச்சை எங்களுக்கு தேவை இல்லை...உங்கள் மரபின் அடிப்ப்டைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் கட்டாயமும், நிலைமையும் எங்களுக்கு இல்லை. சில சுயமரியாதை அற்ற,பகுத்தறிவற்ற ஜென்மங்கள் இருக்கும் வரை உங்களுக்கு கவலை இல்லை, நன்றாக கலப்பட வியாபாரம் செய்து கொள்ளுங்கள்

மானுட தர்மத்தை வலியுறுத்தும் திருக்குறள்

மனுதர்மம் - வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு சாதிகள் -பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் - உண்டு என்று உபதேசிக்கிறது.பிராஹ்மண ; சத்திரியே வைஸ்த ; த்ரயோவர்ணாத் விஜரதய;சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம ; பிராமணன் சத்திரியன் வைசியன் என்று இம்மூவரும் துவிஜர்கள். நான்காவது சாதியான சூத்திரன் ஒரே சாதி இவனுக்கு உப நயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் - மனுதர்மம்.

திருக்குறள் -மக்கள் அனைவரும் ஒரே இனந்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.

மனுதர்மம் -மாம்சம், மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்ய வேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தர வேண்டும் என்கிறது.மத்யம், மாம்ஸம், சமீனம், சமுத்ரா மைதுனமேவச ; ஏதே பஞ்சமகாரா; ஸ்யுர் மோக்­தா ஹியுகே யுகே.கள், இறைச்சி, மீன், சமுத்ரா மைதுனம் இவ்வைந்தும் மோ­த்திற்குச் சாதனங்கள்.

திருக்குறள் - ஜீவ இம்சையே கூடாது. மாம்சம் சாப்பிடக் கூடாது. யாகம் கூடாது என்கிறது.கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்.அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(மாமிசம் சாப்பிடுவது பற்றி கருத்து வேறுபாடு இருந்தாலும் ,திருக்குறளும் மனுவும் எப்படி வேறுபடுகிறது என்பதை விளக்கவே மேற்சொன்ன பதிவு)

மனுதர்மம் -பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த சாதி என்கிறது.அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம் ; ஸம்ப்பர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி.ஆரியன் தொழிலைச் செய்கிற அனாரியன் ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாக மாட்டான்.ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு ; கர்மஸமா திசத்?எதேஷாமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனசூயயாபொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திர னுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்.

திருக்குறள் - பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மனுதர்மம் -ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுகபோகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது. விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத் ;நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்ய யனாஹிச.சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவன் அடிமையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.

திருக்குறள் -ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழிய வேண்டும் என்கிறது.இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்துகெடுக உலகியற்றி யான்.மனுதர்மத்தில் -பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல சாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாச்சிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.வேதத்தில் வர்ணம் வருகிறது. மனு ஸ்மிருதியிலும் சூத்திரரினும் தாழ்ந்த சாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.

திருக்குறளில் -ஒரு இடத்தில் கூட பிராமணன் சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது- வர்ணாச்சிரம தர்ம வாசனையே கிடையாது.

Friday, March 16, 2012

பெரியார் தலித்திய விரோதியா???

இன்று பரவலாக அவாள்கள்(சொற்பமான விதி விலக்குகள் உண்டு!) முதற்கொண்டு அம்பேத்காரிஸ்ட்(விதிவிலக்குகள் மட்டுமே இதில் அட்க்கம்!) வரை கேட்பது திராவிடம் என்ன செய்து கிழித்தது...பெரியார் என்ன செய்து கிழித்தார்.... பொதுவாக அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை,மேலும் அவர்களுக்கு எதிராக இருந்தார் மற்றும் தலித் தலைவர்களோடு அவர் முனைப்பாக செயல்படவில்லை,தலித் விடுதலையை அலட்சியப்படுத்தினார் என்பது...பெரியாரும் சரி,அம்பேத்காரும் சரி சாதி எதிர்ப்புக்கு பிராமணீய ஆதிக்கம் மற்றும் இந்து மதமே மூலம் எனக்கொண்டார்கள்,அதுவே உண்மையும் கூட.அதை மறுக்கவோ/மறைக்கவோ முடியாது.அதே சமயம் அம்பேத்காரின் இந்தியா,இந்தி என்கின்ற அமைப்புக்குள் பெரியாரால் உடன்பட இயலவில்லை,அதை அவர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நீதிக்கட்சி பிற்காலத்தில் தலித் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவையும் இழந்ததை நாம் மறுக்க முடியாது ஏனென்றால் பிராமண அல்லாதாரின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் தலித் மற்றும் முஸ்லீம்களை ஒதுக்குவதாக இருந்தது. அதற்காகவும் இப்பொழுது திராவிட இயக்கங்கள் தடம் புரள்கின்றன என்பதற்காகவும் தனிப்பட்ட முறையில் பெரியார் மீது வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. என்னால் முடிந்தவரை அந்த குற்றச்சாட்டுகளுக்கு இங்கே பதிலளித்திருக்கிறேன் உங்களின் விமர்சனத்திற்காக...

இப்பொழுது பெரியார் என்ன செய்து கிழித்தார் அவர் இருக்கும்பொழுது அவர் சார்ந்த இயக்கங்கள் செய்தது என்ன...அவர் இறந்த பின்பும் அதன் தாக்கங்கள் என்ன என்பதை என் மூளைக்கு எட்டிய அளவிற்கு ஒழுங்குபடுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்... சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று சாதியொழிப்பு. தந்தை பெரியார் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக்கையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார்.

1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மாநாட்டில் சாதி, தீண்டாமை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் . அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்று வருமாறு:

4(அ) மனிதநேயத்தின் அடிப்படையிலும், தேசிய முன்னேற்றத்திற்குத் தேவை என்ற முறையிலும் தீண்டாமை என்னும் நிறுவனத்தை ஒழிக்கப் பாடுபடுமாறு இம்மாநாடு அழைக்கிறது. எந்த ஒரு மனிதரும் தீண்டத்தகாதவராக, அணுகத்தகாதவராக, பார்க்கத் தகாதவராகக் கருதப்படக் கூடாது. எந்த ஒரு சமூக ரீதியான அல்லது குடியுரிமை ரீதியான பாரபட்சங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மீதும் பிரயோகிக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களுக்கும் அனைத்துவிதமான பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

தொடக்கமே சாதி எதிர்ப்பு:

சுயமரியாதை இயக்கத்தைக் காணும் முன் பெரியார் தீவிர காங்கிரசுக்காரராகவும், காந்தியப் பற்றாளராகவும் இருந்தார். ஆனால் அவர் காங்கிரசிலிருந்த காலத்திலேயே சாதியத்தையும் தீண்டாமையையும் கடுமையாக எதிர்த்தார். 1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கினார்.1925இல் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டில் தமிழர்களுக்குச் சாதிமுறை புதிதானது. மனுஸ்மிருதியின் வழியாகத்தான் பார்ப்பனர்களால் தமிழர்கள் மீது சாதிமுறை திணிக்கப் பட்டது. பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்தான் என்று பேசினார்.காங்கிரசிலிருந்து வெளியேறியபின் சாதியொழிப்புக் கருத்தில் காந்தியாருடன் கடுமையாக மோதினார். ஒருவர் தனது விருப்பப்படி எந்த ஒரு சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற காந்தியின் தவறான கருத்தை எதிர்த்தார். சாதிமுறையை ஒழிப்பது என்பது வருணாசிரம தருமத்தை ஒழிப்பதில்தான் அடங்கியுள்ளது என்ற கருத்தில் உறுதியுடன் செயல் பட்டார்

சாதி எதிர்ப்புக் கருத்தியலில் சலியாத உறுதி:

1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1928 தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெரியாரைப் பின்பற்றித் தத்தம் சாதிப் பெயர்களைக் கை விட்டவர்களின் பெயர்கள் குடிஅரசு ஏட்டில் வெளி வந்தன. சுயமரியாதைக்காரர்கள் தங்கள் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதினின்று விலகி நிற்க வேண்டும் எனப் பெரியார் குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடுத்தார்.

1930 மே 10, 11 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்குப் பம்பாயைச் சேர்ந்த எம்.ஆர். ஜெயகர் தலைமை யேற்றார். அம்மாநாட்டில் ‘சாதிகளும் அவற்றின் தீய போக்குகளும் இந்தச் சமூகத்திலிருந்து சாதிய வேறு பாடுகளையும் பாகுபாடுகளையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும்’ என்பதையே காட்டுகிறது. அதன் பிறகே சமூக அமைதியும், நல்லிணக்கமும் பல்வேறு சமூகங்களிடையே ஏற்படும். சாதியொழிய வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி 1944இல் சேலத்தில் நடைபெற்ற பதினாறாவது மாகாண நீதிக்கட்சி மாநாடு வரை இதே நிலைப்பாட்டில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர் சிக்கல் குறித்தும், தீண்டாமையை ஒழித்தாக வேண்டும் என்னும் கருத்துக்கு முதன்மை தந்தும் குடிஅரசு ஏடு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது.இந்துச் சனாதனவாதியும் கடைந்தெடுத்த பிற்போக்குப் பார்ப்பனருமாகிய மதன்மோகன் மாளவியா பம்பாயில் 1932 செப்டம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற “அரிஜன சேவா சங்க”த் தொடக்க விழாவில் பேசும் போது “தீண்டாமைக்கு நமது சாஸ்திரங்களில் இடமில்லை. தன்னுடன் சேரும் உபநதிகளில் அசுத்தத்தை அகற்றி நீரைத் தெளியச் செய்யும் கங்கா நதியைப் போலத் தேவ ஆலயங்கள் தன்னிடம் வரும் தீண்டாதவர்களையும் புனிதமாக்கும்” என்கிற கொழுப்பான சொற்களை வெளிப்படுத்தினார். இந்தச் சாதிவெறித் தலைவரின் பேச்சுக்குக் குடிஅரசு ஏடு (9.10.1932) தன் கடுங்கண்டனத்தை வெளியிட்டது.

பெரியாரும் தமிழகத் தலித் தலைவர்களும்:

பெரியார் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிவந்த பிறகும்கூட சுயமரியாதை இயக்கம் என்பது பரந்த அளவிலான பார்ப்பனரல்லாத சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று அணி என்ற அடிப்படைப் புரிதலுடனேயே செயல்பட்டார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலை என்பதற்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தார்.பெரியார், ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பி வரும் வழியில், இலங்கையில் சில நாட்கள் செலவிட்டார். கொழும்பு ‘ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தார்’ அளித்த வரவேற்பின் போது அவர் பேசுகையில் “பாஷாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், குலாபி மானம் என்ற சொற்களின் உட்கருத்தைப் புரிந்து கொண்டால்தான் தாழ்த்தப்பட்டோர் ஈடேற வழியுண்டாகும்” என்று கூறினார் (குடிஅரசு 6.11.1932).அவ்வரவேற்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ்.ஆர். முத்தய்யா பெரியாரது தொண்டு முழுவதும் தங்களது (தாழ்த்தப்பட்டோரது) விடுதலையையும் சுதந்தரத்தையும் அளிக்கக் கூடியது என்றும் தங்கள் சமூகம் அவரை என்றும் மறக்காது என்றும் கூறினார் (குடிஅரசு 13.11.1932).

11.11.1932இல் தமிழகம் திரும்பிய பெரியாருக்குச் சென்னையில் தரப்பட்ட முதல் வரவேற்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படையும் ஆகும் (குடிஅரசு 27.12.1932). நாடு திரும்பியதும் பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய முதல் தலையங்கமும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனை குறித்ததுதான். (பெரியார் : சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. இராசதுரை-வகீதா, நூல் முதல் பதிப்பு, பக்.194, 195).ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் முதன்மைப் பங்காற்றிய மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்

கிளர்ச்சிகளும் போராட்டங்களும்:

1.சமபந்தி விருந்துகள்: சாதிக் கொடுமைக்கு எதிராக அந்நாளில் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத் தோழர்களால் சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1927 சனவரி 2ஆம் தேதி நாகப்பட்டனத்திலும் 1932 ஏப்பிரல் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும் நடத்தப்பட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவர்க்கும் ஆதிதிராவிடத் தோழர்கள் உணவு பரிமாறினர். அனைவரும் சாதி வேறுபாடுகள் களைந்து விருந்துண்டனர்.

2.இரயில்வே உண வகங்களிலும், தனியார் உணவு விடுதிகளிலும் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளை அகற்ற சுயமரியாதை இயக்கத்தினரால் வீச்சான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது வரலாறு.எப்படி இருந்த நாடு இது? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்து இருந்தனர்?பஞ்சமர்களும், நாயர்களும், பெரு நோய்க்காரர் களும் நுழையக் கூடாது என்று விளம்பரப்படுத்தி யிருந்தார்களே! (குடிஅரசு 3.5.1936).இரயில்வே உணவு விடுதிகளில்கூட பிராமணாள் சூத்திராள் என்று இடம் பிரித்து வைக்கப் பட்டு இருந்ததே!

1924இல் கோவை சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தபோது, காளிதாச அய்யர் என்ற பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் அந்த முயற்சியிலே ஈடுபட்டு, வெற்றியும் கண்டாரே! 27.1.1941 நாளிட்ட விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்ற தலையங்கத்திலே பிராமணன், சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களின் அந்தத் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல் எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது; ஆனால் தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே விடுதிகளுக்கும் இது நடைமுறைப் படுத்தப்பட்டது. 30.3.1941-ஆம் நாளை இரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண்டாடுமாறு விடுதலை ஏட்டின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேலத்தில் கலந்து கொண்டனர் என்பது தெரியுமா?

பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் தங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க இயலாத நிலையை எதிர்த்துப் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்

கோயில் நுழைவுப் போராட்டங்கள்:1927 பிப்ரவரி 3இல் மதுரையிலும், 8ஆம் தேதி திராவிடன் ஏட்டின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையிலும், 1929 ஏப்பிரல் 4ஆம் தேதி ஈரோட்டிலும் அதே ஆண்டு திசம்பர் 16ஆம் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் குடிஅரசு ஏட்டில் விரிவாகப் பதிவாகியுள்ளனஆதிதிராவிடர் தவிர்த்து... என்று அவர்கள் போராட்டம் நடத்தியதாக குறிப்பு இல்லையே!? மேலும் வைக்கத்தில் புலையர்களுக்கும், ஈழவர்களுக்கும் சேர்ந்து கோயிலை சுற்றியுள்ள தெருவில் போராட்டம் நடத்தியவர் தானே தந்தை பெரியார்

திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியில் சமுதாய மாற்றத்திற்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசாங்க உத்தரவு நெ.2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924.ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிருவாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது. உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 26ந் தேதி.1924ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள்பற்றியது.திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை).(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.(எ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,
(பி) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாக இருந் தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் உயர்ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.(இது அரசாங்கத்தின் உத்தரவு - மாநில அரசு)

பி.எல்.மூர் அரசாங்க செயலாளர் தாழ்த்தப்பட்டோரைப் பேருந்துகளில் அனுமதிக் காத கால கட்டம் ஒன்று இருந்தது. இராமநாதபுரம் மாவட்ட போர்டு தலைவராக இருந்த பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (நீதிக்கட்சி) இருந்த காலத்தில் என்ன ஆணை பிறப்பித்தார் தெரியுமா?இந்த மாவட்டத்தில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு போவதில்லை யென்றும், டிக்கெட்டில் ஆதி திராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது - ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்புவிதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அத்தகைய விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.(குடிஅரசு ஈரோடு 4.5.1930 )1932ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று சென்னைச் சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் ஒடுக்கப் பட்ட மக்கள் கோயிலில் நுழைய வகை செய்யும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.அந்தக் கால கட்டத்தில் இது திராவிட இயக்கத்தின் வியக்கத்தக்க, போற்றத்தக்க சாதனை யல்லவா!

உள்ளாட்சித் துறையிலோ தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக்கூடம் ஆதி திராவிடர் மாணவர் மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும், அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன், இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்யப்பட்டது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 .

பிற்காலத்தில் கோயில் தமிழ் வழிபாட்டு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற உரிமை சட்டம் இதெல்லாம் பெரியாரின் தாக்கங்கள் தானே என்பதை மறுக்க முடியுமா???? சென்னை உயர் நீதிமன்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி யாரென்று உங்களுக்கு தெரியுமா??? விடுதலையில் பெரியார் அதை பற்றி த்லையங்கம் எழுதியதும் கருணானிதி சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து விசாரிக்க சொன்னார், ஜஸ்டிஸ் வரதராஜன் என்கின்ற ஒரு ஆதிதிராவிடரை முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக்கியதும் பெரியாரின் தாக்கம் தானே???? அம்பேத்கார் பெரும் புரட்ச்சியாளர் தான் அவர் படிப்பறிவிற்கு முன் பெரியார் ஒன்னும் இல்லை தான்....ஆனால் அய்யாவின் பகுத்தறிவை,போராட்டத்தை கொச்சப்படுத்தி நன்றி மறந்தவர்களாக வேண்டுமா .....? சில பார்ப்பனர்களின் வால் ஆடலாம், அதை பார்த்து இப்பொழுது புதிதாக முளைத்திருக்கும் சில தமிழ் தேசியவாதிகள் மற்றும் சில அம்பேத்காரிஸ்ட்டுகளின் த்லையும் ஆட வேண்டுமா???மேலும் திராவிட இயக்கங்களின் வரலாறே தெரியாமல் கதைப்பவர்களுக்காக...... http://www.noolulagam.com/product/?pid=4044 நன்றி.

Tuesday, February 21, 2012

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா 2

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா (Sindhu - Sindhi - Sindhiya - Indhu - Indhi - Indhia)[ உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள,புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி!!! ]

இந்திய போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் - மிதவாதிகள் என்று பிரிக்கலாம் என்றும், காந்தியின் வழி தொட்டவர்கள் மிதவாதிகள் என்றும், திலகரின் அடிவருடிகள் தீவிரவாதிகள் என்றும் நமக்கு சொல்லிக்கொடுத்தது நம் பள்ளிக்கூட வரலாற்றுப்பாடம்,இவர்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திர கால கட்டத்தில் வாழ்ந்த அரசியல் விடுதலைக்கு அப்பாற்பட்டு சமூக விடுதலையை முன்னிறுத்திய பெரியார் மற்றும் அம்பேத்காரின் பல்வேறு போராட்டங்களுக்கு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறு முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஒரு வேளை அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக சிலர் கருதியிருக்கக்கூடும்!!! மேலும் இந்த தீவிரவாதிகளும்,மிதவாதிகளும் சந்திக்கும் புள்ளியும் இருட்டடிக்கப்பட்ட,மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது... ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் தொடங்கலாம்.
“ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்சுனன் முதலியவர் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இது தான் இந்து ஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை"
இது வாஞ்சினாதன் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று, தானும் இறந்த பொழுது அவன் சட்டைப்பையில் இருந்த கடிதம்.இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை ஆனால் குறிப்பாக ஆஷ் துரையை கொன்ற நோக்கமும் நமக்கு தெரிய வேண்டுமல்லவா...

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார். அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்

ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர். அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார். உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டி வரச்சொல்லிவிட்டு நடந்துகொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசை வந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார். "சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Offcial Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சில வரலாற்று உண்மைகளையும், எப்படி மிதவாதிகள் இவர்களிடமிருந்து வேறுபட்டார்கள் (பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!?),இந்த தீவிரவாதிகளிடமிருந்து மாறுபட்ட சிலரை பற்றியும் அடுத்து பார்க்கலாம்...

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா (Sindhu - Sindhi - Sindhiya - Indhu - Indhi - Indhia)[ உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள,புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி!!! ]

இந்தியா என்று கூறியவுடனும், ஜன கன மன கதி பாடும்பொழுதும் மெய் சிலிர்ப்பது எல்லாம் எனக்கும் நிகழ்ந்தது நான் பத்தாவது படிப்பதற்கு முன்பு வரையில்...ஒவ்வொரு சுதந்திர நாளிலும் பள்ளிக்கு செல்லும் பொழுது எங்கள் நகருக்கு(லெனின...் நகர்) பக்கத்து நகரை(ராம் நகர்) தாண்டி செல்கையில் காக்கி சட்டை,அரைக்கால் சட்டை மற்றும் தொப்பியுடன் ஒரு கூட்டம் ஆவேசமாக சுதந்திர நாளை கொண்டாடுவதையும்,எங்களை நிறுத்தி கொடிக்கு வணக்கம் செலுத்தி விட்டு போக சொல்வதையும் அந்த வயதில் நான் பெரிதாக யோசித்ததில்லை,யோசிக்கும் மன நிலையும் அப்பொழுது இல்லை மறைக்கப்பட்ட வரலாற்றையே நான் அதுவரை பள்ளியில் படித்ததால்.....அப்பொழுதெல்லாம் காந்தியும், நேருவும் தான் எனக்கு கதா நாயகர்கள்!!! அந்த கூட்டத்தை பற்றி அப்பா சொல்வார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்று...அப்பொழுது ஒரு விடயத்தை பற்றி மட்டும் ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்ஸே காந்தியை கொன்றான் என்ற நிகழ்வையும் அப்பா கூறிய அந்த விளக்கத்தையும் ஆனால் அதற்கு மேல் அந்த விடயத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அப்பொழுது இல்லை...சிறு வயதிலிருந்தே பேச்சு,கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு இருந்ததால் 1997 ஆம் ஆண்டு (பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்பொழுது)எங்கள் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பேசினால் என்ன என்று தோன்றியது.அதற்கான குறிப்புகளை சுப வீயிடமிருந்து(அப்பாவின் நெருங்கிய நண்பர்) பெற்ற பொழுது,அவர் கூறிய இரண்டு குறிப்புகள் இந்திய சுதந்திரத்தின் மீது இருந்த ஆர்வத்தை சிறிது குறைத்தது...இந்த பொன்விழாவில் தான் உத்திரபிரதேசத்தில் அதுலா தேவி என்ற தாழ்த்தப்பட்ட பெண் கோயிலுற்குள் நுழைந்த காரணத்தினால் அவளை பலாத்காரம் செய்து அவள் கணவனை கொன்ற நிகழ்வு...மேலும் கே.ஆர் நாராயணனை இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக்கினால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்திடாது ஏனெனில் அவருக்கும் திருப்பதியில் சிவப்பு கம்பள விரிப்பு மறுக்கப்பட்ட நிகழ்வு....இந்த இரண்டு குறிப்புகளை முன்னிறுத்தி பேசியபொழுது வித்தியாசமாக இருந்தது எனக்கும் கேட்டவர்களுக்கும்!!! இதன் மூலம் எனக்கு தோன்றிய கேள்வி.. இது யாருக்கு கிடைத்த சுதந்திரம்...???அப்பொழுது தான் அப்பாவின் மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான பெரியாரின் மேலும்,மேலோட்டமாக அறிமுகமான அம்பேத்காரின் மேலும் ஆர்வம் அதிகரித்தது.........ஆனால் அப்பொழுதும் காந்தி, நேரு மீதிருந்த மதிப்பு குறையவில்லை....சிந்தனைகளும், ஆய்வுகளும்(தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்ற கடைசி ஆயுதம்!!!) தொடரும் ......................