Wednesday, December 5, 2012

மொழி ஆராய்ச்சி - 1


இந்திய எழுத்து மற்றும் குறியீடுகளின் வாயிலாக...


இந்தியாவின் பழங்கால எழுத்து முறை என்று பார்க்கின்ற பொழுது முதலில் வருவது பிராமி எழுத்து முறை. அசோகரின் கி.மு 3ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும், தமிழ்னாடு மற்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் பிராமி எழுத்து முறை பயன்படுத்தி இருப்பதை வைத்து அதன் பழமையை நாம் யூகிக்க முடியும்.தெற்காசியா முழுவதிலும் பிராமி எழுத்து முறை பரவி இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அசோகர் கால பிராமி கல்வெட்டுகள்

பிராமி எழுத்து முறையின் மூலம் பற்றி 3 தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

1.செமிட்டிக் எழுத்து முறையை கொண்ட ஆதிகால எழுத்து முறையான அரமேயத்திலிருந்து பிராமி எழுத்து முறை உருவாகியிருக்கலாம்.

2.ரைஸ் டேவிட் என்கின்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்து முறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்.

3.ஹேண்டர் மற்றும் ரேண்டர் என்கின்ற ஆங்கில மொழி அறிஞர்கள் இந்த எழுத்து முறை இந்தியாவிலிருந்து முக்கியமாக சிந்து சமவெளி குறீயிடுகளிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர்.


மேலும் சிலரோ அசோகரே இந்த எழுத்து முறையை கல்வெட்டுகளில் பொறிப்பதற்காக கண்டுபிடித்திருக்கக் கூடும் எனவும், மேலும் சில தமிழ் அறியர்களோ பிராமி என்பது தமிழ் எழுத்து முறையே என்றும் அசோகர் அதை பிராகிருதம்(வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகள் மற்றும் அதன் வழக்குகள்) எழுதக்கூடிய எழுத்து முறையாக உருவாக்கினார் என்றும் கூறுகின்றனர்.

சோழர் கால வட்டெழுத்து


கிரந்த எழுத்து முறை
 இந்த பிராமி எழுத்து முறையிலுருந்தே வட்டெழுத்து முறையும், கிரந்த எழுத்து முறையும் தோன்றியதாக கருதுகின்றனர். கிரந்த எழுத்து முறை என்பது தென்னிந்தியாவில் வடமொழியினை எழுத பயன்படுத்தப்பட்ட் ஒரு எழுத்து முறை. வட்டெழுத்து என்பது தமிழ் பிராமிக்கு மூலம். வட்டெழுத்து வழியாக வந்த தமிழ் பிராமியே தற்கால தமிழ் எழுத்துக்களுக்கு மூலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



இதனடிப்படையில் நமக்கு முன் தோன்றும் கேள்விகள்...

பிராமி எழுத்து முறை தென்னிந்தியாவிற்கு அறிமுகம் ஆகும் பொழுது இங்கிருந்த எழுத்துக்களுக்கு அல்லது குறியீடுகளுக்கு மூலம் என்ன?

தமிழிற்கு பிராமி எழுத்து முறையே மூலம் என்றால் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள்/குறியீடுகளுக்கும் தமிழிற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

பிராமியின் கால கட்டம் சிந்து சமவெளி காலத்திற்கு முந்தைய காலகட்டமா இல்லை பிந்தைய கால கட்டமா?


தொடரும்...

Tuesday, December 4, 2012

குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் மோடி மந்திரமா!?

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாக இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999இல்தான் அவர் முதல்வரானார்.



1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங...்களில் ஒன்றாகஇருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோதுஎட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.


மின்உற்பத்திக்குத்தேவையான கட்டுமானங்களில் 35விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில்உருவாக்கப்பட்டது.


நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின்மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப்பெரிய ரிலையன்ஸ்எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின் சோடாஉப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான்உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராகநரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.


குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக்கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

http://articles.timesofindia.indiatimes.com/2009-01-31/edit-page/28016891_1_vibrant-gujarat-gujarat-today-narendra-modi