Sunday, February 21, 2010

யாரைப் போல் இவன்?

கமல் என்னும் மாபெரும் கலைனன், நடிகன் மற்றும் சகலகலா வல்லவனுக்கு ரசிகனாக இருப்பதில் என்றும் பெருமை கொண்டுள்ளேன் ஆனால் அவரை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது என்பது அவர் கடைபிடிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வானது என்பதால் அவரின் சமீபத்திய உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்தின் விமர்சனத்தை இங்கே வைத்துள்ளேன்,இதையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமில்லை,என் விமர்சனத்தின் மீதான உங்களின் விமர்சனத்தையும் நான் எதிர்பார்க்கிறேன்.உன்னைப் போல் ஒருவன் சிறந்த திரைக்கதை மற்றும் தொழில் நுட்பத்தில் வெளிவந்த சற்று நெருடலான கருத்தைக் கொண்ட படம் என்பதே மறுக்க முடியாத உண்மை,அதன் மீதான விமர்சனத்தை கமல் மீது வைக்க நான் க்டமைப்பட்டுள்ளேன்.

உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த சமயத்தில் நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து எங்கிருந்து வந்தாலும் அதனை வரவேற்க வேண்டும்,அதன் அடிப்படையில் தான் படத்தின் மறு பதிப்பாக தமிழில் உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுத்ததாக கூறினீர்கள்.உங்களின் புகழ்பாடும்(அவ்விதம் புகழ்பாடி உணர்ச்சி வயப்பட்டு அழுதவர்களை நீங்கள் அமைதிப்படுத்தியதோடு அவர்களுக்கு கொஞ்சம் அறிவுரையும் சொல்லியிருக்கலாம்),படத்தின் புகழ் பாடும் நிகழ்வுகளைத் தவிர்த்து ஆறுதலாக
ஒரெ ஒருவர் மட்டும்(விஜய் தொலைக்காட்சி இவ்விதம் விமர்சனம் செய்ய ஒரெ ஒருவரை மட்டும் அனுமதித்ததா என்று தெரியவில்லை!? கோபி மற்றும் நிகழ்ச்சியின் இயக்குனர்க்கே வெளிச்சம்.)படத்தின் மீதான நியாயமான விமர்சனத்தை தெரிவித்தார்.வன்முறைக்கு என்றும் வன்முறை தீர்வாகாது,அதற்கான காரணத்தை,மூலத்தை ஆராய்ந்து தீர்வு காண்பதே உகந்தது அப்படி இருக்கையில் இந்த திரைப்படத்தின் கருத்து எனக்கு உடன்பாடில்லை என்ற அந்த நண்பரின் விமர்சனத்திற்கு உங்களின் பதில் பின்வருமாறு அமைந்தது."உங்களின் கருத்து தான் என் கருத்தும் ஆனால் இந்த திரைப்படத்தின் கருத்து அதிலுள்ள கதானாயகனின் கருத்து"
உங்களின் இந்த பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..... நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து எங்கிருந்தாலும் வரவேற்க வேண்டும் என்கிறீர்கள்,இப்பொழுது அது என் கருத்தல்ல கதானாயகனின் கருத்து என்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளாத கருத்தை எப்படி நல்ல கருத்து என்கிறீர்கள் என்று புரியவில்லை,உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தான் அதை நல்ல கருத்தாக அங்கீகரித்து தமிழ் படுத்தவும் செய்திருக்கிறீர்கள்.
விருமாண்டியில் மரணத்திற்கு மரணம் தீர்வல்ல என்றீர்கள், நல்ல கருத்து (உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஏற்றுக்கொள்ளப்படாததா? தெளிவு படுத்தினால் நல்லது!?)அதற்கு எதிர்மறையான கருத்தைக்கூறும் உன்னைப் போல் ஒருவனை தமிழ் படுத்தியிருக்கிறீர்கள்.....இந்த இரண்டில் எது உங்கள் கருத்து? எது நல்ல கருத்து?

பொத்தாம் பொதுவாக போராளிகளை தீவிரவாதிகள் என்று உரைத்து(காஷ்மீர் போராளிகளோ,விடுதலைப் புலிகளோ இல்லை வட கிழக்கு மா நிலங்களின் போராளிகளோ)அவர்களைப் பற்றியெல்லாம் ஆராயாமல் மணிரத்னம் மற்றும் விஜயகாந்த்(!!!)எடுக்கும் படங்களுக்கும் உங்களின் குருதிப்புனல் மற்றும் உன்னைப் போல் ஒருவனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை சில தொழில் நுட்ப நேர்த்திகளைத் தவிர...

நாங்கள் எந்தவித தீவிரவாத செயல்களையும் ஆதரிப்பவர் இல்லை ஆனால் இந்திய தீவிரவாதம் மற்றும் உலக தீவிரவாதத்திற்கான காரணத்தை,மூலத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை கொடுக்காமல் இவ்விதம் நீங்கள் கொடுக்கும் தீர்வு பகுத்தறிவிற்கு ஒவ்வானதே...
மேலும் இத்திரைப்படத்தின் மீதான சுபவீ மற்றும் சிலரின் விமர்சனத்தையும் இதனுடன் இணைத்துள்ளேன்...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=556:2009-09-27-17-08-37&catid=1:articles&Itemid=87

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1011:2009-10-31-02-18-37&catid=938:09&Itemid=185

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=873:2009-10-22-07-09-10&catid=11:cinema-review&Itemid=129