Tuesday, June 21, 2011

திருமண மந்திரங்கள்

'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வாஅந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜஉதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடேஅந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்

விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது

திராவிடம்

அது என்ன லெமூரியா,ஆப்பிரிக்க ஆசிய கண்டங்களின் பாலமாக பரந்து விரிந்து பட்ட நிலப்பரப்பாக 19 ஆம் நூற்றாண்டுல இங்கிலாந்தை சேர்ந்த உயிரியல் வல்லுனரான பிலிப் ஸ்கெலேட்டரால் சொல்லப்பட்டது,அத அவர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடைப்பட்ட இந்திய பெருங்கடலிலிருந்திருக்கக் கூடிய பகுதி என்றும் கூறினார்.

எத வச்சி லேமூரியானு அவர் பேர் வச்சார்னா லெமூர்னு ஒரு அரிய தொல்லின உயிரியின் மிச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் தான் இருக்கிறது.இங்கிருந்து தான் மனித உயிர் முதல்ல பரிணமிச்சரிப்பதாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த எர்னஸ்ட் ஹேக்கல்-லும் அவருடைய ஆராய்ச்சி முடிவுலெ சொல்றார்.இன்னும் சில அறிழ்யர்கள்...இந்த பரப்பு பசிபிக் கடல் முழுவதும் பரவியிருக்கலாம்னு சொல்றாங்க..ஏன்னா அவங்க ஆராய்ச்சி படி அந்த தொல்லுயிர் மிச்சம் ஆசிய,அமெரிக்க பகுதிகள்லெயும் இருக்கறதா சொல்றாங்கெ...மேலும் 1880 ஆம் ஆண்டு பிலாவற்ஸ்கி மற்றும் 1894 ஆம் ஆண்டு பிரடெரிc ஸ்பென்சர் ஒலிவர் மற்றும் 1930 ஆம் ஆண்டு காய் வாரன் பலார்ட் அவங்க புத்தகத்துல லெமூரியா பத்தி ஆராய்ச்சி செஞ்சு சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது எது எப்படியொ..எல்லாரும் நம்பறது என்னனா சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க பகுதிகள இணைத்து இந்துமாக்கடலில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்துச்சு அங்க இருந்து தான் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்பது…இப்ப குமரிக் கண்டத்த பத்தி என்ன சொல்லிறுக்காங்கனு பாப்போம்...அந்த லெமூரியா கண்டத்த தான் பிற்பாடு குமரிக் கண்டமா குறிப்பதா சொல்றாங்க..அத பத்தின குறிப்பு தொல்காப்பியம்,சிலப்பதிகாரம்,மணிமேகலை மற்றும் இறையனார் எழுதிஅ அகப்பொருள் உரையிலெயும் இருக்கு...அந்த குமரிக்கண்டம் லெமூரியா போலல்லாமல் சில பகுதிகள் கடலுக்குள் புதைந்து மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரை சுமார் 4200 மைல் பரவி தென்னிந்தியா மற்றும் இலங்கையை உள்ளடக்கியிருந்தது.அகப்பொருள வச்சி பாத்தா தமிழர்களுடைய இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுவரை செல்லும்! மொத்தத்துல லெமூரியா கண்டமாக சொல்லப்படுற அந்த பரந்து பட்ட நிலப் பகுதியாக பிற்காலத்தில் சொல்லப்பட்ட குமரிக் கண்டம் இந்த நூல் ஆதாரச்ச வச்சி பாக்கும்போது ஒரு கற்பனையாக இருக்க முடியாது…

திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம். தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979). இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது.


இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது. மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது. குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும். இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்).


'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். 'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும். அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன: 1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை; 2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை; 3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம்.


இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும�. இந்த அளிக்கை, இந்தக் கருத்தரங்கின் தொடக்க உரையாக அமைவதால்,இப்பிரச்சினைகளின் முகப்புக் குறிப்புக்களாகச் சிலவற்றைக் கூறிச் செல்வதே பொருத்தமானதெனக் கருதுகிறேன். திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையி�ே பார்வைப்பரப்பு வேறுபாடு உண்டு. தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு 'பொதுமைப்பரப்பினை' சமயச் சார்பற்றதாக்கியமையே. (செக்கியூலர்-secular என்னும் தொடரை நாம் இன்றுங்கூட சமய நீக்கம், சமயச் சார்பின்மை என எதிர்நிலையில் மொழிபெயர்க்கின்றோமேயன்றி, அதனை ஒரு 'உடனிலைப்'பாடான -positive எண்ணக் கருவாக எழுத முடியாதுள்ளது.) சைவத் தமிழ், வைஷ்ணவத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ்ப் பாரம்பரியங்கள் பற்றிய ஆய்வுகள் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டு, அவையாவற்றையும் தமிழின் பொதுப்பாரியத்தினுள்ளே கொண்டுவரும் ஒரு புலமைப் போக்கு இன்று வலுவுடையதாகவிருப்பினும், இவையாவற்றுக்கும் அப்பாலான, சமயச் சார்பற்ற ஒரு 'தமிழ்ப் பண்பாட்டு' இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. 'தமிழ்ப் பண்பாடு' எனும் பொழுது மதப் பாரம்பரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காது, பிற மொழிச் செல்வாக்குக்கள் குறைந்தவை/அற்றவை என்று கருதப்டும் இலக்கியங்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்நெறியும் தோன்றிற்று. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன. இவ்வேளையில், அனைத்திந்திய, உலக மட்டத்தில் தமிழ்/தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்கள் என்று கருதப்படுகின்ற பக்தி இலக்கியம், நடராஜர் சிலை போன்றவற்றை இக்கருத்துநிலை முதன்மைப்படுத்தாது விட்டமையையும் குறிப்பிடல் வேண்டும்.


திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக முற்றிலும் அதன் தொடர்பியல் தேவைகளுக்காக, தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். ஆனால், பெரியார், அண்ணாதுரை கருத்தாடல்களில் இந்த மொழிப் பிரயோகம் மாற்றங்களைப் பெற்றது. பெரியாரின் பயன்பாட்டில் பேச்சு நிலை வழக்கு (spoken dialict) முதன்மைப்பட அண்ணாதுரையின் பயன்பாட்டில் (பின்னர் கருணாநிதியிலும்) தமிழின் விதி முறைப் பிரயோகத்திற் (formal use) பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிட்ட மொழிநடை (அடுக்குத் தமிழ்) அரசியல் சமூகத் தொடர்பாடலைப் பெரிதும் வலுப்படுத்துவதாக இருந்தது. மேலும், திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளையும் தமது தொடர்பாடற் சாதனமாகக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். இவர்களது வாசக வட்டத்தின் தன்மை, பார்வைப் பரப்புக் காரணமாகத் தமிழின் பத்திரிக்கை எழுத்துத் துறையில் ஒரு புதிய 'மரபு' (idiom) தோன்றிற்று எனலாம். திராவிட இயக்கத்தின் செல்வாக்குச் சினிமாத் துறையையும் பாதித்தது. அந்தப் பாதிப்புக் காரணமாக, இந்தப் புதிய 'நடை' மிக்க பரவலினைப் பெற்றது. தமிழ்ப் பண்பாட்டுத் துறையில் திராவிட இயக்கத்தின் தொழிற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயும்பொழுது, தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவிய 'தமிழர்' என்ற சொல்லின் ஒரு பயன்பாடு பிராமணர்களல்லாத தமிழர்களையும் குறிப்பது. தமிழகத்தில் 'தமிழர்' பற்றிய குறிப்பீட்டுக்குத் 'தமிழியன்' (Tamilian) என்ற ஆங்கிலப் பிரயோகத்தையும் அவதானித்தல் வேண்டும். தமிழரைத் 'தமிழ்ஸ்' (Tamils) என்னாமல் (இலங்கையிலுள்ளது போல்), 'தமிழியன்' எனும் பொழுது, தொனிப்பொருளாக வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது.


Dravidian Name History :-The English word Dravidian was first employed by Robert Caldwell in his book of comparative Dravidian grammar based on the usage of the Sanskrit word drāvida in the work Tantravārttika by Kumārila Bhaṭṭa (Zvelebil 1990:xx). Caldwell coined the term "Dravidian" from the Sanskrit drāvida, which was used in an 8th-century text to refer to South India by Adi Shankara. The publication of the Dravidian etymological dictionary by T. Burrow and M. B. Emeneau was a landmark event in Dravidian linguistics.As for the origin of the Sanskrit word drāviḍa, there have been various theories proposed. Basically the theories are about the direction of derivation between tamiẓ and drāviḍa. That is to say, while linguists such as Zvelebil assert that the direction is tamiẓ >drāviḍa (ibid. page xxi), others state that the name Dravida also forms the root of the word Tamil (Dravida -> Dramila -> Tamizha or Tamil).[who?]The word Dravida may also have its origin from Sanskrit 'Drava' - meaning water or sea. The word Dravidian may have been used to identify people living in India close to the sea. Since southern India is surrounded by sea on three sides, the word may been used predominantly to identify the inhabitants of these areas.[citation Aryan Name History:-in historical or dated usage, the Indo-Iranian languages and their speakers, viz. the Iranian and Indo-Aryan peoples, collectively known as the Indo-Iranians the Indo-European languages more generally and their speakers, in contemporary usage, Among the Hindu/Indian nationalists, the Hindu/Indian people (Aryan derives from the Sanskrit word Arya)[1] in colloquial English by Nazi racism, persons corresponding to the "Nordic", "blond-haired, blue-eyed" physical ideal of Nazi Germany[n 1] within US white supremacy, the "white race". The "Aryan race" taken to correspond to the original speakers of Indo-European languages and their present day descendants.[3]



சம உரிமை தான் பெண்களின் தவறுக்கு காரணமா?????

அது என்ன ஒழுக்கம்....யார் யாரெல்லாம் ஒழுக்க சீலர் என்று சொல்லிக்கொள்கிறோமோ அவர்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாலே தீர்வு கிடைத்து விடும், நானும், நீங்களும்...முத்தாலிக் அண்ணா உட்பட!? :-) இந்த கருத்தும் சரி,அதை ஆதரிப்போரும் சரி ஆணாதிக்கவாதிகளே!!! ஆதரிக்காத நானும் சில சமயங்களில் ஆணாதிக்கவாதியே (என்னெ செய்ய இதுவும் சமூகம் சார்ந்த பழக்கத்தின் வெளிப்பாடே)...

ஒரு உதாரணம் சொல்றேன் ஒரு ஆம்பிள தண்ணி,தம் அடிச்சா உடல் நலக்கேடுனு சொல்ற சமுதாயம்....ஒரு பொண்ணு அதே பழக்கம் கொண்டா என்ன சொல்லும்? ஒழுக்க கேடு....இங்க எங்க இருந்து வந்திச்சு ஒழுக்கம்...உடனே கலாச்சாரம்னு ஒன்னு வரும்...அந்த கலாச்சாரம் யாரு வரையறை பண்றது...அதன் அளவீடு என்னெனு ஆராஞ்சா...கெடைக்கறது என்ன ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தானே....ரெண்டுமே உடல் நலக்கேடு தான்னு சொல்றது தானே யதார்த்தம்,உண்மை....அடுத்து கற்பு...ஒழுக்கத்தின் வேராக கலாச்சாரம்னு நம்ம வரையறை பண்ணதில்லெ இருக்கறது....இது யாரு உண்டாக்கினது....ஆணாதிக்க சமூகம் தானே...கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்னு சொல்றது தானே யதார்த்தம்,உண்மை அப்படி கற்புனு ஒண்ணு இருக்கறதா நாமெ சொல்றெ பட்சத்தில்....அடுத்து ஒரு ஆம்பிள ரெண்டு,மூணு பெண்ண வச்சிருந்தா அதுக்கு பேர்....அவன் பெரிய ஆளுய்யா...முடியுது வச்சிக்குறானு சொல்றது....ஒரு பெண் அப்படி இருந்தா அவெ பேர் பச்சையா தேவடியா....ஏன் இந்த முரண்பாடு...அவனெ தேவடியன்னு சொல்லனும் இல்லையா? அது தானே யதார்த்தம்,உண்மை. தேவதாசிகளுக்கு மட்டும் தண்டனை கொடுத்த சமூகம் இப்ப தானே அங்கெ போறவங்களுக்கும் தண்டனை கொடுக்குற யதார்த்த நிலைக்கு வந்திருக்கு...இப்ப விடயத்துக்கு வருவோம்.....

கொலைக்குற்ற்ம் என்பது பெருங்குற்றம் தான்,,,,,அதற்கு தண்டனை கிடைக்கவே வேண்டும் ஆண் செய்தாலும் சரி,பெண் செய்தாலும் சரி.ஆண்களும் பல்வேறு குற்றங்கள் புரியும் இந்த நிலையிலும் (கள்ளக்காதல் உட்பட)பெண்கள் செய்யும் குற்றங்களே இவ்விதம் விமர்சனங்களுக்கு வருவதன் காரணமும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே....பெண்கள் பிரசுரிப்பதற்கும்,வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருப்பதால்!!!பூவரசியை விமர்சனம் செய்யும்போது அவளிற்கு குழந்தை கொடுத்து,அதை அழிக்கச் செய்த அவள் காதலனையும் விமர்சிக்க வேண்டும் அல்லவா? அப்ப என்னெ சொல்லும் இந்த சமூகம்....அந்த பெண்ணுக்கு எங்கெ போச்சு புத்தினு சொல்லும்......மேலும் அது சொல்லும் அவெ தான் அவனெ வளைலெ விரிச்சுருப்பா...இந்த பொண்ணுங்களே இப்படிதான்னும் சொல்லும்....எல்லாவித விமர்சனங்களும்,அவளை நோக்கி இருக்கும் பட்சத்தில்...எவ்விதம் நாம் நியாயமான தீர்வை எட்டெ முடியும்? ஒரு குற்றம் என்று வரும்பொழுது அங்கு இருவரின் பங்கும் இருக்கிறது,இவன் என்ன செய்ய வேண்டும்,இவள் என்னெ செய்ய வேண்டும்...எதிர்காலத்தில் இவ்விதம் நிகழாமல் இருக்க ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி செய்ய வேண்டிய ஆலோசனைஹ்கள் என்னெ என்று சிந்திக்கும் போதே தீர்வு பிறக்கும்...மத்தபடி பெண்களை மட்டும் குற்றம் சுமத்தும் இந்த கருத்தோட்டத்தில் அல்ல....உதாரண்மாக FIRE என்ற படம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.....அந்த படம் வந்த போது காலாச்சாரம் போச்சு ஒழுக்கம் போச்சுனு கூப்பாடு போட்டவர்கள் பலர்....ஆண்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பையும் அந்த படம் பறை சாற்றியது....வீட்டுலெ இருக்குற பெண்கள் கண்ட கண்ட நாடகம் பாத்து கெட்டு போறாங்களாம்....வெளிய போற பெண்களும் கெட்டு போறாங்களாம்...சரி என்னெ தீர்வு...அவங்க குடும்பத்தாரோடெ சகஜமா பேசனுமாம்...எல்லாம் சரி தாங்க...எத்தன ஆம்புளைங்க அவஙளோடெ அனுசரனையா,அன்பா,புரிஞ்சுட்டு பேசுறாங்க...இதையும் நீங்க சொல்லனும் இல்லையா....குற்றமும் சரி,தீர்வும் சரி இரண்டு பக்கமும் சார்ந்தது......பெண்கள் படிக்குறாங்க,வெளிய போறாங்க அதனாலெ தான் விவாகரத்து நடக்குது அப்படினு சொல்றதும்,இந்த சம உரிமைனாலெ தான் தப்பு நடக்குறதுனு சொல்றதும் மெய்ப்பொருள் அல்ல :-) அது யார் வாய் கேட்டாலும் :-)

Monday, June 6, 2011

4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்-ரஷியாவில் கண்டுபிடிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம்.இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.பிபிசி தொலைக்காட்சியில் ‘Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார்.இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்-ரஷியாவில் கண்டுபிடிப்புஅப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது.இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார்.இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

மனு தர்மமும், மானிடமும்

நூல் தோற்றம்,உலகின் தோற்றம்,கல்வி,திருமணத்திற்கு முன்,பிராமணர் இல்லறம்,பிராமணர் உணவு,காடுறைதல்,அரசன்,அறம், நிலமும் விதையும்,வருணங்கள்,மாபாவம் ஐந்து,வினையும் விதியும்,பொருள் அடைவு....ஒவ்வொரு பொருளடக்கத்திலும் நீதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.பெரும்பன்மையான நீதிகள் வருணங்களையே சுற்றி சுற்றி வருகின்றன.மேலும் மனுவில் உள்ள நீதிகளை தரும்பொழுது அது எந்த பொருளடக்கத்தில் வருகிறது நீதி எண் என்ன என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.....உங்கள் கருத்துப்படி வருணத்தின் அடிப்படையில் ஒருவன் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் இல்லையேல் அவன் தண்டிக்கப்படுவான் பிராமணன் உட்பட (தண்டனையில் வேறுபாடு இருக்கலாம் ஏனெனில் வேதங்களை கற்றுணர்ந்து வாழும் பார்ப்பான் தவறிழைக்க மாட்டான் என்ற நம்பிக்கை...மத்தவன்லாம் தவறிழைப்பான் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம் அப்படியும் ஒரு நம்பிக்கை...என்ன பாழாய்ப் போன,பித்தலாட்டமான,பாரபட்சமான நம்பிக்கையோ!?),இன்ன தொழில் தான் இவன் பண்ண்னும்,மீறி வேற தொழில் பண்ணா தண்டனை அதுலையும் வேறுபாடு....இது தான் உங்க பார்வையிலெ வாழ்க்கையெ நெறி படுத்துமோ!? இது தான் நீதியோ!?கால்ல பொறந்ததா சொல்லப்பட்றதுக்கு என்னலாம் வியாக்கியானம் கொடுக்குறீங்க!? நல்ல சமாளிப்பு, எல்லாரும் சம படைப்புனா ஒரே இடத்துலெ இருந்தே பெறக்குற மாறி சொல்லிருக்கலாமேங்க!? இதுலையே வேறுபாடு தெரியுதே!? மொத்ததுலெ எவனும் வயித்துலெ பொறக்கல(பெரியார் வேடிக்கையா சொன்ன மாறி தமிழந்தான் சரியா வயித்துலெ இருந்து பொறந்தான் போல!?),என் கருத்து சாதியின் அடிப்படையெ வருணம் தான்,மனுவிலேயே அதுக்கு ஆதாரம் இருக்கு,மேலும் இது தொழில் அடிப்படை, நெறிபடுத்துதல் அப்படினா உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,இழி பிறப்பு அப்படிலாம் இருக்கக்கூடாது இல்லையா? ஆனால் மனுவில் அவ்விதமே இருக்கிறது....மனுவின் சில நீதிகளை(!?)பார்ப்போம்

உயிர்களின் தோற்றத்தில் வருன் நால் வருண ஒழுக்கத்தில் சூத்திரர் கடமை(74)யென சொல்லப்படுவது பிராமணர்,சத்திரியர்,வைசியர் ஆகிய மூவருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் முதற்கடன்.பிராமணன் பிரம்மாவின் தூய்மையான முகத்திலிருந்து முதன்முதலில் தோன்றினான்,அதனால் அவன் பிறவியிலேயே வேதங்கள் பெற்றவனாகிறான்,அகவே அவன் மனித படைப்புகள் யாவற்றிலும் மேலானவனாகிறான்(77)உயிர்களில் மனிதர் சிறந்தவர்,மனிதர்களில் பிராமணர் சிறந்தவர்(79)மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட சமய,சமூக அறங்களை காத்து, நிலைப்படுத்துவதற்காகவே,உயிர்கள் அனைத்தினும் பிராமணன் தலைமை வாய்ந்தவனாக படைக்கப்பட்டான்(82)பிராமணன் முதற்பிறவி உயற்பிறவியான அத்தகுதியினால் பிராமணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்து செல்வத்தையும் தனக்கென கொள்ள தக்க் உரிமை படைத்தவனாகிறான்(83)பிராமணன் மற்ற மூவரிடமிருந்தும் உணவு,உடை,பொருள் மற்றெதுவானாலும் அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் பிராமணின் உடமையை தான் அம்மூவரும் வைத்து வழ்ந்து வருபவர்களவர்.(84)இதற்கு மேலும் நம்மால் சொல்ல முடியுமா இப்பிரிவுகள் நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் தான்,ஏற்றத்தாழ்வற்ற,உயர்வு,தாழ்வு,இழினிலை பாரா பிரிவுகள் என்று?????

அறத்தில் வரும் பிராமணன் தாக்கப்படல் பின்வரும் நீதிகளை வலியுறுத்துகிறது...263.பிராமணரை சூத்திரர் கையாலேனும்,கருவியாலேனும் தாக்கினால்,பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்புகளை குறைப்பதே தக்க தண்டனையாகும்264.பிராமணனுக்கு சமமாக ,அகங்காரத்தோடு அமர்கிற சூத்திரனுக்கு உயிருக்கு தீங்கின்றி தண்டனை தருக.இடுப்பில் சூடு போடுக.உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக.ஊரை விட்டு துரத்திடுக.265.பிராமணன் மீது காரிஉமிழ்பவன் உதடுகளை அறுத்திடுக. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டிடுக.மலத்தை வீசினால் ஆசன பகுதியை அறுத்து விடுக.266.பிராமணனின் குடுமி,மீசை,தாடி,கழுத்து குறி முதலியவற்றை பற்றியிழுத்தால் சூத்திரன் கையை துண்டித்திட வேண்டும்.267.சூத்திரன் பிராமணனை கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும்,பிராமணின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்தங்குல நீள கம்பியை பழுக்க காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணித்திடவும்268.பிராமணனை பார்த்து இதனை செய் என்று அகந்தையோடு சூத்திரன் கட்டளையிட்டால் அவன் வாயிம் எண்ணையை கொதிக காய்ச்சி ஊற்ற வேண்டும்.இப்படிப்பட்ட நீதிகள்(!?)சூத்திர வருணத்தாருக்கு மட்டுமல்ல வேறெந்த வருணத்தாருக்கும் இல்லை அதாவது அவர்களை இழித்து பேசும் பிராமணனுக்கு..... நன்றாக நெறிபடுத்துகிறீர்கள்.....என்னே சமூக நீதி!?மேலும் மற்றுமொரு உயரிய நீதி...வருணங்கள் பொருளடக்கத்தில் வரும் சண்டாளர் தொழிலில்...33.இழி பிறப்பாளன் பிராமணன் பணியை புரியும்போதும் அவன் இழி பிறப்பாளன் தான்.பிராமணன் இழி தொழில் யாது புரிந்தாலும் அவன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான்.அவன் உயர் பிறப்பு,உயர் பிறப்பு தான்.ஏனெனில் பிரம்மனின் ஆணை அவனை அவ்வாறு நிலை படுத்துகிறது.அடுத்து சாதியை பற்றி கூறும் மனுவின் நீதிகளை பார்ப்போம்

பொருளடக்கம் வருணங்களில் வரும் சாதிகளின் தோற்றம் நீதி சொல்வதென்ன என்பதையும் பார்ப்போம்...9. நால் வருணத்தவரும்,கற்பறம் தவறாதலாலும் ,தத்தமது கோத்திரத்திலெயே மணம் கொள்வதாலும் சாத கருமங்கள் ஆற்றாமையாலும் சாதிகள் தோன்றுகின்றன(வேறு கோத்திரத்தில் மணம் கொள்வதால் சாதிகளை அழிக்கலாம் என்ற நீதியை இதன் மூலம் மறைமுகமாக அவர் அறியாமலெயே தெரிவித்த இந்த நீதிக்காக வேண்டுமானால் நன்றி சொல்லலாம் மனுவிற்கு:-) )இதே பொருளடக்கத்தில் சண்டாளர் வாழ்க்கையில் வரும் 38ஆம் நீதி இவ்வாறு ஆரம்பிக்கிறது....சாதி கலப்பு மறைவானதே.சங்கர சாதியார் நால் வருணத்தவரை போலவெ வெளியில் தோன்றினும் தொழில் கொண்டு சாதி அறியலாம்......இவை போன்று பல நீதிகளை எடுத்துரைக்கலாம்....மொத்ததில் ஒரு சாதிக்கு ஒரு நீதி பிற சாதிக்கி மறு நீதி இதுவே மனு நீதி...வருணங்களே சாதியின் மூலம்.பிராமணர்கள் த்ங்களை உயர் நிலையில் நிறுத்திக் கொள்ள அவர்களால் எழுதப்பட்ட அவர்களுக்கான நீதியே அது!!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே.பிஸ்வாஸ் அவர்கள் ‘பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார்,மனுவிற்கு சம்பந்தமாக உள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பதிய விழைகிறேன்...“இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாக திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இந்தத் திட்டமே உள்வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய படையெடுப்பினை எதிர்த்து தனது தாய் நாட்டை காக்கப் போரிட்டபோது வேத படையெடுப்பாளரான போர்த்தலைவன் இந்திரனால் கொல்லப்பட்ட பூர்வகுடி நாயகனான கிருஷ்ணனை பார்ப்பனியம் ஆரியமயமாக்கியது. நாட்டுப்பற்றுமிக்க கிருஷ்ணா, வெளிநாட்டு ஊடுருவாளரான இந்திரனை எதிர்த்து பத்தாயிரம் போர் வீரர்களுடன் போரிட்டார். இறுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிகள் ஆரிய போர்த் தலைவனான இந்திரனால் கொல்லப்பட்டனர். பிற்காலத்தில் இந்த புகழ் பெற்ற மண்ணின் தலைவனின் பெயரால், சதுர்வர்ண தத்துவம் கீதையில் போதிக்கப்பட்டது. ரிக் வேத காலத்தின் தொடக்கத்தில், பெரும்பான்மை மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த பூர்வகுடித் தலைவனான மனு ஒரு கிராம தலைவராக இருந்தார். அவரது ஆளுமை கடத்தப்பட்டது. பிருகு என்ற பார்ப்பனன் அளித்த சட்டங்கள், மனுவின் பெயரில் எழுதப்பட்டு, மனு ஸ்மிரிதியில் சட்டமாக்கப்பட்டு, இந்தியாவின் பூர்வகுடி மக்களை சுரண்டி அடிமைப்படுத்தப் பிரச்சாரம் செய்யப்பட்டன. மண்ணின் போர்ப்படையை வீழ்த்தவும், இந்திய உழவர்களிடையே பார்ப்பனியத்தை பிரச்சாரம் செய்யவும் நடைமுறைப்படுத்தவும் அவர் ஆரியமயமாக்கப்பட்டார். புரட்சியாளரான அசுர மன்னன் பாலாவின் மகனான அக்னியை, இந்திரனின் முகாமில் சேர்ந்து, நாட்டிற்கு துரோகியாக நடிக்க காரணமாக இருந்தது மனுவாகும். ஆரிய காலத்திற்கு முந்தைய சிந்து-ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதிகளில் நிலவிய, மண்ணின் மதமான பௌத்தத்தை பிரச்சாரம் செய்த, பழமையான சிரமண பண்பாட்டை ஏற்றுக் கொண்ட சாக்கிய பழங்குடியைச் சேர்ந்த கவுதமரையும் உள்வாங்கியது.

புத்தர் இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் 9-ஆவது அவதாரமாக ஆக்கப்பட்டுள்ளார். பார்ப்பனியம் முகமது மற்றும் இஸ்லாத்தையும் கூட கடத்த முயற்சித்தது (அலோபனிஷத், பவிஷ்ய பூரண் ஆகியவற்றை பார்க்கவும்) சூத்திரரான சிவாஜி சிவசேனை உருவாக்கியதன் மூலம் மிக செறிவாக இந்துமயமாக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரை இந்துமயமாக்கி 'ஒரு உண்மையான ஆரியன்” எனவும், விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் (கல்கி) எனவும் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”இப்படிப்பட்ட ஆரியப் படையெடுப்பிற்கும், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் தமிழர் வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஏராளமான ஆதாரங்களில் சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிடர் என்ற சொல்லும் இப்படித்தான் ஆரியர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். அந்த நூலின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் கி.மு.வில் இராஜதரங்கினி காலத்துக்கு முன்பாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுதரும சாஸ்திரத்தில் திராவிடர் என்றால் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்த அந்த மனு சாஸ்திரத்தை 1919 இல் திருவைந்திரபுரம், கோமாண்டூர் இராமாநுஜாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த நூலில் திராவிடர் பற்றிய குறிப்புகள் உள்ளன.துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயந முதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச் சொல்லப் படுகிறார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 20)விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)பிராமணிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையையடைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய்விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44)மேற்கண்ட ஸ்லோகங்களின்படி க்ஷத்திரிய ஜாதிகளுக்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியவர்களும் - க்ஷத்திரிய ஜாதிகென்ற வரையறைகளை மீறியவர்களும் சூத்திரர்கள் ஆகி விடுகிறார்கள். அந்த சூத்திரர்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்ட தேசங்களில் ஒன்று திராவிடம் என்றுதான் மனுதருமம் கூறியுள்ளது.

மனு தர்மத்தையோ, ஸ்லோகங்களையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. புராணங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, ஆய்ந்தறிந்து, “புராணங்களில் வரலாற்று உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன” என்று கண்டுபிடித்த வரலாற்றுப் பேராசிரியருக்கு மேற்கண்ட மனுதருமத்தில் இருக்கும் வரலாற்று உண்மை தெரியாதது எப்படி?

தமிழ் புத்தாண்டு

எது தமிழ் புத்தாண்டு,எது சமஸ்கிருத புத்தாண்டு,எது ஆங்கில புத்தாண்டு என்பதற்கான விடையும் விளக்கமும் இரண்டு வருட காலமாக தெரிய வந்திருக்கிறது முக்கியமாக முதல் இரண்டு புத்தாண்டுகளின் வேறுபாடு...மாற்றம் தானே மாறாதது...இந்த மாற்றத்தையும் விவாதிக்க விழைகிறேன்.

நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் எதை செய்ய வேண்டும் என்பதை விட எதை செய்ய கூடாது என்பதில் தெளிவு வேண்டும்....அந்த விதத்தில் எந்த மாற்றத்தையும் வரெவேற்கலாம் தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்ற மாற்றத்தையும் கூட...சித்திரை திரு நாள் தமிழர் புத்தாண்டென கூறப்படுவதற்கான காரணத்தை பார்ப்போம்....கிருஷ்ண பகவான் 60,000 இளம் பெண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாராம்,இதை பார்த்த நாரதருக்கு அவர் மேல் காமமாம்.இதையறிந்த கிருஷ்ணன் நாரதரை யமுனை ஆற்றில் மூழ்கச் சொன்னாராம்,மூழ்கி எழும்பொழுது பெண்ணாக உருமாருகிறார் நாரதர், நாரதருடன் கிருஷ்ணன் 60 ஆண்டுகள் கலவியில் கூடி பெற்றுடுத்த 60 பிள்ளைகளின் பெயர் பின்வருமாறு.....

பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத,பிரசோத்பத்தி,ஆங்கிரச,ஷீமுக,பவ,யுவ,தாது,ஈசுவர,வெகுதானிய,பிரமாதி,விக்ரம,விஷூ,சித்ரபானு,சுபானு,தாரண,பார்த்திப,விய,சர்வஜித்,சர்வதாரி,விரோதி,விகர்தி,கா, நந்தன,விஜய,ஜெய,மன்மத,துன்முகி,ஏவிளம்பி,விளம்பி,விகாரி,சார்வரி,பிலவ,சுபகிருது,சோபகிருது,குரோதி,விஸ்வாவசு,பரபவ,பிலவங்க,கீலக,சவ்மிய,சாதாரண,விரோதிகிருது,பரிதாபி,பிரமாதீச,ஆனந்த,ராக் ஷச, நள,பிங்கள,காளயுக்தி,சித்தார்த்தி,ரவுத்ரி,துன்மதி,துந்துபி,உருத்ரோத்காரி,ரத்தாஷி,குரோதன,அக் ஷயஅதாவது ஆண் பெண்ணாக மாறி....உண்மையில் இரண்டு ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளாம்....இந்த ஓரினச் சேர்க்கையால் பெற்ற 60 பெயர்களை 60 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் அழைப்பதாகவும் கூறப்படுகிறது,இந்த 60 பேரும் பிறந்த மாதம் சித்திரை என்பதால் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறது,,,,இது ஆரியக் கலாச்சாரக் கதை,இதை பகுத்தறிவவர் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை,தீபாவளி எவ்விதம் தமிழர் வாழ்வில் நுழைந்து விட்டதோ அவ்விதம் இதுவும் நுழைந்து விட்டது 2008 வரையில்!!! 1921 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய மறைமலை அடிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு 500 தமிழறின்யர்களுடன் பச்சையப்பன் கல்லூரியில் கூடி திருவள்ளுவராண்டை கணக்கிட்டு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்...அது நடை முறைக்கு வந்தது 2008 ஆம் ஆண்டு தான்...எது எப்படியோ ஆரிய கலாச்சார(கன்றாவி)கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது மகிழ்ச்சியே....புத்தாண்டு வாழ்த்துகள் 15-01-2011(தமிழ்) 01-01-2011(ஆங்கில) 14-04-2011(சமஸ்கிருத) :-)

இப்போதைய சித்திரை வருடப்பிறப்பு தமிழருக்குரியதல்ல ஏனெனில் சுழற்சி முறையில் வரும் பிரபவ முதல் அட்சய வரையான அறுபது ஆண்டுகளில் ஒன்றின் பெயர்கள் கூட தமிழில் இல்லை. இது தொடர்ச்சியாக சுழற்சி முறையாக வந்தவண்ணமே உள்ளன. இப்பெயர்கள் ஆகமங்களின் பெயர்கள் என சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒருவர் பிறந்து அறுபதாம் ஆண்டு அவர்பிறந்த நட்சத்திரம் நாள் என்பன மீண்டும் வரும் இதை சாத்திரங்கள் சஷ்டி பூர்த்தி விழா என்கின்றன. பிரபவ முதல் அட்சய வரையான அனைத்தும் வடமொழிப்பெயர்களே. இந்த அறுபது ஆண்டுகளின் தோற்றம் பற்றி புராணங்கள் கூறும் புனைகதையானது நகைப்புக்கிடமானது. ஆணும் ஆணும் உடலுறவு கொண்டதன் மூலம் அறுபது புத்திரர்களைப் பெற்றனர். இந்த 60 புத்திரர்களின் பெயர்களில்தான் பிரபவ தொடக்கம் அட்சய வரையான அறுபது ஆண்டுகளும் அழைக்கப்படுகின்றன. இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழர்களை இழிவுபடு;த்தவே முயல்வர். எனவேதான் தமிழர்களுக்கென்று ஒரு தமிழ் ஆண்டு தேவையாக உள்ளது.

சிங்காரவேல் முதலியார் என்பவரால் தொகுக்கப்பட்ட “அபிதான சிந்தாமணி” என்ற நூலிலே(பக்கம் 1392) இந்த ஆணுக்கும் ஆணுக்கும் (சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்) பிறந்த 60 புத்திரர்களின் பெயர்களில் அறுபது ஆண்டின் பெயர்களும் அழைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப்பிறப்பு எப்பொதிருந்து வந்தது என நோக்கில் இது நாயக்கர் காலப்பகுதியிலேயே இப் புராணக்கதை புனையப்பட்டது. அதற்குமுன் சேர, சோழ, பாண்டியர்களது காலத்தில் கூட இவை பற்றி எந்தக்கருத்துக்களும் இல்லை. மறைமலை அடிகள் கூட இதை ஆதாரப்டுத்தியுள்ளார் என்பது இங்கு சுட்டிக்கட்டத்தக்கது.