Tuesday, October 2, 2012

சிவாஜி - மேல் தட்டு வர்க்கத்தினால் கைப்பாவையாக்கப்பட்ட அடிமை!!!

சிவாஜி எதிரிகளை வீழ்த்துவதில் மாவீரன்,அடிமைப்பட்டு கிடந்த மராத்திய மண்ணை மீட்டெடுத்ததில் தீரன், விடுதலை வேட்கை கொண்ட மண்ணின் மைந்தன் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமுமில்லை.


பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ்,சங் பரிவார்,சிவ சேனா கூட்டங்கள் மட்டுமல்ல மராத்திய மண்ணில் உள்ள அனைத்து மேல் தட்டு வர்க்கமும் சிவாஜியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதில...் சிவாஜியின் வீரம் மட்டும் தான் காரணமா இல்லை இதற்கும் மேல் ஏதாவது இருக்குமா என்று சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியாது, சிவாஜியை எந்த நேரத்திலும்/ எந்த காலத்திலும் அந்தக் கூட்டம் விட்டுக் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ் நாளில் போராடிய மராத்தியத்தின் அம்பேத்காரை புகழாத இந்த கூட்டம், பெரியார் மற்றும் அம்பேத்காருக்கு அரை நூற்றாண்டு முன்பே மேலாதிக்க சாதி திமிருக்கு சாட்டை அடி கொடுத்த மராத்திய மகாத்மா ஜோதிராவ் பூலேவை புகழாத இந்த கூட்டம் , சிவாஜியை மட்டும் இந்த அளவுக்கு புகழ்வதேன் ? அவரை விட்டுக் கொடுக்க முனையாதது ஏன்???

1664 முதல் 1670 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்தார் சிவாஜி, அப்பொழுது முகலாய மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சி தான் இந்தியா பெரும்பான்மையும் இருந்தது. அவர்கள் இருவரும் ஹிந்துவாக இருக்கும் பட்சத்திலும் இல்லை முஸ்லீமாக இருக்கும் பட்சத்திலும் பேரரசர் - சிற்றரசர் என்கின்ற அடிப்படையில் அங்கு போர் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் ஆனால் அவர்களுக்கு இடையே நடந்த போரை ஹிந்து - முஸ்லீம் போராக திரித்தது மேற்சொன்ன கூட்டத்தின் மதவெறி பார்வை.


அடுத்து அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்ஜியம் பல்வேறு வரலாற்று உண்மைகளை தோலுரித்துக் காட்டியது, என்ன தான் சிவாஜி எதிரிகளின் மீது வெற்றி கொண்டாலும், அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்போது இன்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கூட்டம் சம்மதிக்கவில்லை. அவரின் குலம் ஆளப்பிறந்த குலம் அல்ல என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர்,அதற்கு பிறகு காகப்பட்டரிடம் அவர் அடைக்கலம் புகுந்தபின்னரே அவரால் ஆட்சி கட்டலில் ஏற முடிந்தது, களத்தில் போர் வீரனான சிவாஜி அடிமை பட்டத்துடனே ஆட்சிக்கட்டிலில் ஏற முடிந்தது. சிவாஜியின் அரசாங்கமும் மேல் தட்டு வர்க்கத்தின் அனுசரனையோடும்,அவர்களுக்கு சாதகமாகவும், அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவுமே அமைந்தது என்பது வரலாற்று உண்மை. நன்றி - சுபவீ வலைப்பூ

No comments: