Wednesday, October 24, 2012

இந்தியப் பண்டிகைகள்



நவராத்திரி ஐதீகம் :-


மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.


இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது...

*நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.*

இதுவாகட்டும் இல்லை தீபாவளியாகட்டும் நம்மையே அசுரர்கள், அரக்கர்கள் என்று புராணத்திலும், இதிகாசத்திலும் சொல்லிவிட்டு.. அசுரர் குல, அரக்கர் குல தலைவர்களை அவர்களின் கடுவுளர்கள் அழித்தது போல் காண்பித்து விட்டு அதை அவர்கள் விமர்சையாக கொண்டாடுவது இருக்கட்டும், நம்மையும் கொண்டாட வைக்கிறார்களே... என்னே ஒரு சாமர்த்தியம்? பெரியாரின் தன்மானமும், சுயமரியாதையும் ,பகுத்தறிவும் இதைத் தான் நமக்கு போதித்ததா???இந்தியர்களின் பண்டிகை என்று கூறும்போதெல்லாம் நம் தனித்தன்மையை இழந்து இன்னமும் நாம் இந்திய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா என்று நினைக்கத் தோன்றுகிறது!



No comments: