Friday, March 20, 2015

அமெரிக்கா சொல்லித் தந்த அறிவு

அமெரிக்கா அத்தியாவசியமான சில தேவைகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அவசியமான சில விடயங்களையும் கற்றுத்தந்திருக்கிறது.

ஊரே குப்பை காடாக இருந்தாலும் கையில் இருக்கும் குப்பையை வெளியில் போடுவதற்கு இன்னமும் மனம் வரவில்லை.

சின்ன உதவிகள் யாராவது செய்த போதிலும் , சின்ன தவறுகள் நாம் செய்த போதிலும் நன்றி, மன்னிக்கவும் என்று கூறுவதில் கூச்சம், வெட்கம் வரவில்லை.

எங்கு சென்றாலும் வரிசையாக நிற்காமல் ஆடு மாடுகளை போல கூட்டமாக நிற்கும் மனம் வரவில்லை.

நமக்கு பின்பு வரும் நபரை கருத்தில் கொள்ளாமல் , கதவை திறந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் மனமும் வரவில்லை.

மொத்தத்தில் நாம் இருக்கும் சூழ் நிலையை, நம்மை சுற்றியிருக்கும் சுற்றத்தாரை கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவு ... ஆங்கிலேயனிடம் விடுதலை பெற்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்து இவ்வளவு ஆண்டு காலம் நம் அரசியல் வாதிகள் நமக்கு சொல்லித்தராத அறிவு சிறிது வந்திருக்கிறது!!!

No comments: