Friday, March 20, 2015

தலைமுறைகள் கடந்து...

கடந்த 1 மாத காலமாக பாலு மகேந்திராவை அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தேன்...

நீங்கள் கேட்டவை, ராமன் அப்துல்லா,சந்தியா ராகத்தை மறுமுறை பார்த்தேன்
தலைமுறைகளுக்கு பிறகு அவரின் பேட்டியை பார்த்தேன்...அவர் கூறிய 3 விடயங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது இப்பொழுது அதனுடன் அவரது இறப்பும்......

எனக்காக நான் எடுத்த படங்கள் என்று வீடு, சந்தியா ராகம், தலைமுறைகளை குறிப்பிட்டார்,மற்றவை அனைத்துமே adjustment என்றார். ஒன்று சினிமா இல்லையென்றால் ஒன்றும் இல்லை இந்த நினைப்பில் தான் சினிமாவுக்கு முயற்சி செய்தேன் என்று கூறினார்.

அதற்கடுத்து...என்னிடம் இருக்கும் அனைத்து கதைகளையும் எடுக்காமல் செத்து விட மாட்டேன் என்று கூறினார்... சாவின் வாயிலில் அவர் இருக்கும் பொழுது அந்த 3-ஆவது விடயம் அவரின் மனத்தை என்ன பாடு படுத்தியிருக்கும்? மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.


தலைமுறைகள் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. பல காலங்களாக தன்னை தொப்பியுடனும், கறுப்பு கண்ணாடியுடனும் அடையாளப்படுத்திய பாலு மகேந்திரா தலைமுறைகள் படத்தில் அந்த அடையாளம் இல்லாமல் இயல்பாக தன்னை வெளிப்படுத்தி , நடித்தும் இருந்தார். இயற்கையான அடையாளமான அது தான் இறப்பின் அடையாளமும் கூட என்று அவருக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும் போல!!!

அந்தப் படத்தில் ஒரு காட்சி...ஆதி என்கின்ற சிறுவனிடம் ஒரு பாதிரியார் கேட்பார். தம்பி உன் அப்பா ஒரு ஹிந்து, அம்மா ஒரு கிறித்துவர், அப்படியென்றால் நீ யார் என்று.அந்த சிறுவன் கொஞ்சம் யோசித்து வெகுளியாக நான் ஆதி என்பான்.

அடுத்த தலைமுறைகளுக்கு மத அடையாளம் தேவையில்லை பெயர் அடையாளமே போதுமானது (சில கழிசடைகள் பெயரிலும் மத, சாதி அடையாளத்தை தேட முயலும் என்பது வேறு விடயம்!?)என்பதை இவ்வளவு எளிமையாக அதே சமயம் அழுத்தமாக எத்தனை இயக்குனர்களால் புரிய வைக்க முடியும்?????

# இயற்கையோ அல்லது கடவுளோ கொஞ்சம் காலம் தாழ்த்தியிருக்கலாம்...
அவரின் படங்கள், புகழ் தலைமுறைகள் கடந்து வாழும், பேசப்படும்.....


No comments: