Tuesday, July 7, 2015

சர்ப்பம்


எங்களுக்கு ஒரே கடவுள் இயேசு தான் மேலும் யோகா செய்வது ஹிந்து முனி போல் இருக்கிறது இந்த காரணங்களெல்லாம் போய் இப்பொழுது பதஞ்சலியை ஆதி சேஷன் என்பர் அதாவது பாதி மனிதன் பாதி பாம்பு..அந்த பாம்பு தான் வேதாகமத்தில் சொல்லப்படும் சர்ப்பம்.. ஆதாம் ஏவாள் மனத்தை கெடுத்து நம்மை வீழ்த்தியது அதனால் யோகா செய்யவே கூடாது என்கின்றனர் சில கிறித்துவ நண்பர்கள்.

தமிழ் சித்தர்கள் உலகுக்களித்த யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, அப்படி மோடிக் கூட்டம் பரப்புவது கண்டனத்துக்குரியது என்று பல முறை நாம் சொல்லியாகிவிட்டது, சரி இப்பொழுது இந்த பாம்பு கதையை பார்க்கலாம்!

ஆதாம் ஏவாள் முதல் மனிதர்கள், கடவுள் வேதாகமப்படி உலகை படைத்தது உண்மை என நீங்கள் கொண்டால், எங்களுக்கு அந்த சர்ப்பம் முதல் உண்மை விளம்பியாக, பகுத்தறிவுவாதியாக தெரிகிறது. ஹிந்து மதத்தில் அப்படிப்பட்ட நல்லவர்களை எப்படி அசுரன், அர்க்கன் என்பார்களோ அதே போல் கிறித்துவ மதத்தில் அவைகள் /அவர்கள் சாத்தானாக்கப்பட்டது.

ஆதியாகமத்தில் நன்மை தீமை அறியும் கனியை உண்டாக்கி அதை ஆதாம் ஏவாளுக்கு புசிக்க வேண்டாம் என அறிவுறுத்தி, அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என கட்டளையிட்டு பொய்யுரை பரப்பும் நோக்கம் என்ன??? (சரி எல்லாம் அறிந்த கடவுளுக்கு பின்னாளில் ஆதாம் ஏவாள் அந்த கனியை புசிப்பார்கள் என்று தெரியாதா என்ன... என்பது அடுத்த விவாதப் பொருள் அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம்) நோக்கம் என்னவெனில், இந்த மனிதர்கள் நன்மை தீமை அறியாமல் கண்கள் திறக்கப்படாமல் தனக்கு கீழே இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இந்த குணங்கள் கடவுளின் குணமாக எப்படி இருக்க முடியும்!?

இப்பொழுது அந்த சர்ப்பம் ஆதாம் ஏவாளுக்கு உண்மையை எடுத்துக் கூறி நீங்கள் சாக மாட்டீர்கள், நன்மை தீமை அறிந்து தேவனை போல் இருப்பீர்கள் என்றது. அந்த கனியை புசித்தன் மூலமே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது, அவர்கள் அறிவு பெற்றார்கள், நன்மை தீமை அறிந்தார்கள்... ஏன் தாங்கள் நிர்வாணமாக இருப்பதும் அவர்களால் அறியப்பட்டதற்கு காரணமும் அதுவே!
(இந்த சர்ப்பக் கதையை வைத்துக் கொண்டு அதை ஆதி சேஷனோடு தொடர்பு படுத்தி யோகாவை விமர்சிப்பது தேவையற்றது.)

இப்பொழுது சொல்லுங்கள் யார் உண்மை விளம்பி, யார் பகுத்தறிவு வாதி... நம் அறிவுக்கு , நம் கண்கள் திறக்கப்பட்டதற்கு காரணம் யார் ? நன்மை தீமை அறிவதற்கு காரணம் யார் ???

அந்த சாத்தானே, அந்த அசுரனே, அந்த அரக்கனே தற்காலத்தில் பகுத்தறிவு பேசும் நாத்திகர்களாயிருக்கக் கூடும்!!!

# Dedicated to Ingersoll, Ambedkar & Periyar!

No comments: