Wednesday, July 15, 2015

குமரி கண்டமா சுமேரியமா - 2

தமிழரின் தோற்றத்தையும் பரவலையும் அறிந்து கொள்ள இன்று ஈரான், ஈராக் என்றும் பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோனியா என்றும் அதற்கும் முன்பு சுமேரியா என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் நாகரிகமான அதன் வரலாற்றையும், அவர்களால் படைக்கப்பட்ட உலகின் முதல் நெடுங்கதை, முதல் காவியம் மற்றும் முதல் நாவலான கில்காமேஷ் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

தொழில் புரட்சி, மின்னணு புரட்சி, தகவல் தொழில் நுட்ப புரட்சி இதற்கெல்லாம் மூத்த உலகின் முதல...் புரட்சியான விவசாயப் புரட்சியை பொ.யு.மு (கி.மு)8000 வாக்கில் நிகழ்த்தி ஓட்ஸ், பார்லி, சோளம் முதலியவற்றை பயிரிட்டவர்கள் சுமேரியர்கள் என்று சொல்லப்படுகிறது.200 அடி கீழ் பகுதியும், 70 அடி உயரமும் கொண்ட அவர்களால் கட்டப்பட்ட சிகரங்களான ஜிகுராத்துகள் 7500 வருடங்கள் கழித்தும் இன்னும் கம்பீரமாக நிலைத்திருக்கின்றன. இவர்கள் செம்பையும் தாமிரத்தையும் உருக்கி வெண்கலத்தை கண்டுபிடித்தது பொ.யு.மு 3500 அப்பொழுது தான் எழுத்து முறையை கண்டுபிடித்தார்கள்.எகிப்தியர்களின் பிரமிடிற்கு ஜிகுராத்தே மூலம். இவர்களுக்கு பிறகு வளர்ந்த யூதர்கள் உட்பட பல்வேறு இனங்களும் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் அந்த மொழிகளை எழுத இவர்களின் சுமேரிய எழுத்து முறையையே பயன்படுத்தினர்.

தங்களை என்கி என்ற தெய்வம் அழைத்து வந்ததாக நம்பினார்கள். எரிது என்கின்ற உலகின் முதல் நகரத்தை நிர்மானித்தார்கள் அதற்கு மன்னனாக அலுலிம் உலகின் முதல் மன்னனானான், இது நடந்த காலகட்டம் பொ.யு.மு 5400 என்று குறிப்பிடப்படுகிறது.

கில்காமேஷுக்கு வருவோம். பைபிளில் வரும் நோவா கதைக்கு இந்த கதையில் வரும் அதே போன்றதொரு கதை தான் முன்னோடி.கில்காமேஷ் - என்கிடு இந்த இருவரின் சண்டை அதற்கு பிறகான நட்பு...என்கிடுவின் இறப்பு. கில்காமேஷ் சாகாவரம் பெற தில்முன் என்கின்ற இடத்தில் இருக்கும் உத்தன பிஷ்டரை சந்தித்தல். ஒரு பிரளயத்திலிருந்து தப்பிக்க தன்னை சார்ந்தவர்கள் அனைவரையும் ஒரு பெரிய கப்பலின் மூலமாக தில்முன் என்கின்ற இடத்திற்கு வந்து சேர்ந்ததை கூறி மேலும் சில விளக்கங்கள் மூலமாக நிலையாமை என்கின்ற தத்துவத்தை கில்காமேஷுக்கு புரிய வைப்பதன் மூலம் கதை முற்றுகிறது.

சரி இதற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ??? இதற்கும் தமிழர்களுக்கும் தான் தொடர்பு... பிரபாகரனின் இந்த ஆய்வு கட்டுரை இதற்கு முன்பு பலர் வரலாறு, மொழியியல் மூலம் ஆய்வு செய்தது தான்... நீங்களும் சிறிது ஆய்வு செய்யுங்கள் ... அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments: