Monday, July 20, 2015

கடவுள் - புரிதல் - குழப்பம்

என் உறவினர் ஒருவர் என்னிடம் வந்து உங்களுக்கு நிச்சயம் விசா கிடைக்கும், நாங்கள் கேட்டால் கடவுள் நிச்சயம் கொடுப்பார் என்றார்.
ஆகா எனக்காக வேண்டுகிறாரே என்றெல்லாம் என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை ஏனென்றால் முதலில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அடுத்து இது நாள் வரை எனக்கு நடந்ததெல்லாம் இயற்கையாக , என் முயற்சியில் மட்டுமே நடந்ததாக நான் நினைக்கும் என் தன் நம்பிக்கை. அமெரிக்கா செல்வதெல்லாம் எனக்கு இலக்காகவோ, இலட்சியமாகவோ இருந்ததில்லை, முதலில் எதேச்சையாக நடந்தது, இரண்டாவதாக என் முயற்சியில் நடந்தது அவ்வளவு தான்.அடுத்து நடக்கப் போவது என் முயற்சியில்/விருப்பத்தின் படி/முடிவின் படி நடக்கும்.
சரி அவரின் கூற்றுக்கு வருவோம்... அவரின் கூற்று மறுபடியும் என்னை கடவுள் - புரிதல் - குழப்பம் என்று இருக்கிறாரே என்கின்ற சிந்தனைக்குள் தான் என்னை கொண்டு செல்கிறது. இதை ஒரு சமூக பிரச்சினையாகத் தான் பார்க்க தோன்றுகிறது.
அது என்ன நாங்கள் கேட்டால் கொடுப்பார்... அவர் அந்த மதத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு அடிப்படையிலான பிரிவில் இருப்பவர். சரி அப்படியென்றால் மற்றொரு பிரிவில் இருப்பவர் கேட்டால் கொடுக்க மாட்டாரா??? எதற்காக நீங்கள் கேட்பதை அவர் கொடுக்க வேண்டும்??? உங்கள் பிரிவுக்கு மக்களை இழுக்கும் முயற்சியல்லவா இது??? மதத்தின் பெயரால், பிரிவின் பெயரால் கடவுளை களங்கப்படுத்துவது நாங்களா இல்லை நீங்களா???
பசியில் பஞ்சத்தில் பட்டினியில் வறட்சியில் நாள் தோறும் இறக்கிறார்களே, விவசாயிகள் இல்லாமையில் தற்கொலை செய்து கொள்கிறார்களே.... இவர்களை போன்று அத்தியாவசிய தேவைக்காக பலர் மடிகிறார்களே அவர்களில் எத்தனை பேர் உங்கள் கடவுளிடம் மன்றாடியிருப்பர், அதையெல்லாம் விடுத்து நீங்கள் டாலர் சம்பாதிக்க American Embassy-யில் உட்கார்ந்து கொண்டு Visa Stamping செய்வது தான் அவரின் வேலையா!!!??? அப்படிப்பட்ட கடவுள் இருந்து என்ன இல்லாமல் இருந்து என்ன...
இல்லை இது தான் கடவுளை பற்றின உங்கள் புரிதல் என்றால் உங்களின் குழப்ப நிலை தெளிய நிச்சயம் உங்கள் கடவுளிடம் நீங்கள் மன்றாடிக் கொள்ளுங்கள்!!!

No comments: