Wednesday, July 15, 2015

முதிர்ச்சி

இரவு 11 30 மணி.
இடம் Electronic City Bus Stop.

பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன்.
ஒரு பேருந்து நிற்க அதன் அருகில் சிறிய லாரி செல்ல அதற்கு நடுவே இரு சக்கர வாகனத்தில் இருவர் பறக்க, நொடிப் பொழுதில் அந்த லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டு நல்ல வேளையாக சக்கரத்திற்கு வெளியே விழுந்தார்கள்.
...
அங்கிருந்த கூட்டம் என்ன நடந்தது என்றே தெரியாமல் அந்த லாரி ஓட்டுனரை அடிக்க முற்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் அந்த லாரி ஓட்டுனர் அந்த இடத்தில் நிற்காமல் பறக்கவில்லை. தவறை உணர்ந்து கொள்ளாமல் அந்த இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் அந்த லாரி ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் திட்டவோ / அடிக்கவோ செல்லவில்லை. முக்கியமாக அந்த இடத்தில் இருந்த பெரும்பாலோர் அந்த விபத்தை ஏதோ திரைப்பட காட்சியை போல பார்க்காமல் ஓடி சென்று விபத்தில் சிக்கியவர்களை நலம் விசாரித்து ஆசுவாசப்படுத்த முயன்றனர்.லாரி ஓட்டுனரும் இறங்கி வந்து அந்த இருவரிடம் நலம் விசாரித்து விட்டு சென்றார்.

# நமக்கான முதிர்ச்சிகளை / மதிப்புகளை நமக்குள் நாமே தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!

No comments: