Wednesday, June 3, 2015

எதிர்மறை

எதிர் மறை தோல்வியின் / பின்னேற்றத்தின் வெளிப்பாடா... எதிர்மறையாளர்கள் கலவரக்காரர்களா?

என்ன நீங்க பெரும்பாலும் எதிர்மறையாவே எழுதுறீங்களே என்று கேட்பவர்களிடம் ஆமாம் எதிர்மறை தாக்கம் / சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போல அதை பற்றித்தான் பெரும்பாலும் பேசியாக வேண்டும் என்று கூறிக் கொள்ள விழைகிறேன்!

பெரியார் எதிர்மறையாளர் தான் ஆனால் அந்த எதிர்மறை சிந்தனை தான் சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது மேலும் பெரியார், பெரியாரியல் எந்த வித சாதி ,மத வகு...ப்பு மோதலுக்கு காரணமாக இருந்தது என்று கூற முடியுமா???(ஆமாம் பலருக்கு கேள்வியே கேட்காமல் உண்டு என்றால் நேர்மறை, விமர்சனம் செய்து இல்லை என்றால் எதிர்மறை!!!).
பெரியாரியல் தோல்வியடைந்து விட்டதா,சமூகத்தை முன்னேற்றவில்லையா??? பெரியார் இல்லை என்றால் இங்கு இட ஒதுக்கீடு ஏது, சமூக நீதி ஏது, சுய மரியாதை ஏது ??? நாம் எங்கே படித்திருக்க முடியும்??? இந்த சமூகத்தில் நம் கருத்தை எப்படி தைரியமாக கூறும் உரிமை கிடைத்திருக்க முடியும்???

சமீபத்தில் நடந்த மட்டைப் பந்து ஆட்டத்தில் ஹிந்தியா நன்றாக விளையாடியது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் , அதை ஒரு பெரிய விடயமாக எடுத்து பத்திரிகையும், பலரும் பேசும் பொழுது அந்த நேரத்தில் நாம் விமர்சனத்தை வைப்பது தவிர்க்க முடியாததாகிறது. இது எதிர்மறை அல்ல...சிந்தனையோட்டம் ஒரெ திசையில் இருக்கும் மக்களின் மூளையில் இந்த எதிர்மறை விமர்சனத்தின் மூலம் பல நேர் மறை விடயங்களை வித்திடும் முயற்சி.

உதாரணமாக Economic Times என்ற இதழ் தோனி தன் குழந்தையை பார்த்து 2 மாதம் ஆகிவிட்டது, இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று இணைய செய்தியில் ஆரம்பித்தது. வெட்ட வெளிச்சமாக தெரிவது இது பத்திரிகை வியாபார உக்தி. அதற்கு பதில் அளிக்கு விதமாக அனைவரும் உருக... ஒருவர் மட்டும் சற்று வித்தியசமாக தோனியாவது ஏதாவது வகையில் Computer, Skype போன்ற தொழில் நுட்பத்தில் தன் குழந்தையை பார்க்க முடியும் , ஆனால் நம் எல்லை வீரர்கள் எத்தனை வருடங்கள் தங்கள் குழந்தைகளை பார்க்கும் வழிவகை இல்லாமல், சில நேரம் பார்க்காமலேயே இறந்தும் விடுகிறார்கள் அதனால் இந்த விடயங்களை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள் என்று பதில் அளித்திருந்தார்.இந்த எதிர் மறை சிந்தனை தான் நேர் மறையான சில விடயத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது.

# புரியும் படி சொல்வதானால் ஒரெ மாதிரி சிந்தித்தால் நேர்மறை, கொஞ்சம் மாற்றி யோசித்தால் எதிர் மறை! அம்மணமாக திரிபவர்கள் கூட்டத்தில் ஆடை அணிபவன் பைத்தியக்காரன் தான்!!
ஒரெ மாதிரி சிந்தித்து , நேர் மறையாக இருக்கிறேன் என்று அம்மணமாக திரிவதை விட, மாற்றி யோசித்து , எதிர் மறையாக இருக்கிறேன் ஆனால் ஆடை அணிந்திருக்கிறேன் என்பதாகவே இருந்து விட்டு போகலாம். அவர்களின் பார்வையில் அது பைத்தியக்காரத்தனமாகவும் இருந்து விட்டு போகட்டும்!!!

No comments: