Wednesday, June 3, 2015

May 29, 2015

"ஆடிக்கு பின்னால் ஆவணி என் தாடிக்கு பின்னால் தாவணி"
"வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஆளுக்கொரு வீடு தருவார்களா"
"வளையும் நாணல் புயற்காற்றிலும் பிழைத்துக் கொள்கிறது, வளையாத் தென்னை ஒடிந்து வீழ்கிறது."

என்னடா சம்பந்தமே இல்லாம பேசுறானேனு பாக்குறீங்களா??? இவை அனைத்தும் என் பள்ளி பருவத்தில் (6 முதல் 12) என் காதில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் விழுந்தவை. அது என்ன சந்தர்ப்பம் , எவரால் என்பதெல்லாம் எனக்கு நினைவு இல்லை எப்படி முதல் காதல் நமக்கு நினைவில் இருக்கும் ஆனால் அந்த கால க...ட்டம் மங்கலாக தெரியுமோ அது போல.
நம்மை கவரும் நிகழ்வுகள் கடைசி காலம் வரை பசுமையாக நினைவில் நிற்கும், எதற்காக அந்த விடயங்கள் நம்மை கவர்ந்தன என்ற காரணம் புரியாமலேயே...
நான் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்க ஆரம்பித்த , இன்று நாத்திகனாக இருக்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்ட என் முதல் பள்ளி, கல்லூரி காலத்தில் மறுமுறையும் அங்கு சென்று கண்ணீர் சிந்த வைத்த என் முதல் பள்ளி Sri மகா கணேச வித்தியா சாலா நடு நிலைப் பள்ளி, அம்பத்தூர்.
முதல் வகுப்பில் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த இரண்டாவது அம்மா சரஸ்வதி டீச்சர்
3 ஆம் வகுப்பில் லால் பகதூரை பற்றி பேசின என் முதல் பேச்சு போட்டி (அப்பா எழுதி கொடுத்து நான் செய்த ஒப்புவித்தல் போட்டி அது!)
ரஜினிக்கு இருப்பது போல மூக்கின் மேல் கறுப்பு அடையாளம் இருக்க , அதை ரத்தம் வர தேய்த்தது.
நானும் எனக்கு முதல் நண்பனாக மாறிய தேவேந்திரனும் முதலில் சண்டை போட்டு என் வாய் உடை பட்டது!
என்னை ஏதோ விதத்தில் கவர்ந்த பெண்ணின் ஜடையை எவனோ ஒருத்தன் பள்ளி முடிந்ததும் இழுத்துக் கொண்டு ஓட , அவனை அடித்து துவைத்திருக்க வேண்டுமே என்று கோபப்பட்டது.
வீட்டு உணவை நண்பர்களுக்கு கொடுத்து சத்துணவை உண்டது

6 ஆம் வகுப்பில் என் முதல் கவிதை!
என் ஆச்சியுடன் கடவுளை பற்றி நக்கல் செய்து அவரை உசுப்பேற்றுவது
பேருந்து நிறுத்ததில் குச்சி ஐஸை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வகுப்பு தோழனின் கையை தட்டி விட்டு அவனிடம் அகப்படாமல் ஓடியது.
Maggi Cover-ஐ சாலை சாலையாக அண்ணனுடன் சேர்ந்து பொறுக்கியது!
உயிர் நண்பனுடன் காரணமில்லாமல் சண்டை ,,,அதற்கு பிறகு இணைதல்.
8 ஆம் வகுப்பில் சமூக அறிவியல் ஆசிரியரை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தது அதற்கு பிறகு அந்த ஆசிரியருடன் நெருக்கமானது.
9ஆம் வகுப்பின் ஆண்டு தேர்வில் ஆங்கில தேர்வில்
தேர்ச்சி ஆக முடியுமா என்கின்ற பயத்தில் கடவுளை கும்பிட்டு அதற்கு பிறகு எனக்கு தன் நம்பிக்கை இல்லையா என்று சுய ஆய்வு செய்து எந்தவொரு நெருக்கடியான கால கட்டத்திலும் எவரையும் நம்பாமல் முழு நாத்திகன் ஆனது

11 அல்லது 12 ஆம் வகுப்பில் சுபவீ எழுதி கொடுத்த குறிப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரம் பற்றி 50 ஆண்டு சுதந்திர பொன்விழாவில் பேசி சர்ச்சையானது.
கல்லூரி படிக்கும் பொழுது எதேச்சையாக சரஸ்வதி டீச்சரை சந்தித்து என் வாழ்வின் ஆரம்பத்தில் பயணித்த அவர்களுடன் அவர்கள் வாழ்வின் கடைசி கால கட்டத்தில் பயணித்து அவர்களின் மரணத்தையும் நான் சந்தித்தது!

# நாளை அடி எடுத்து வைக்கப் போகும் 33ஆம் அகவையில் இந்த நிகழ்வுகள் எவ்வளவு பசுமையாக இருக்கின்றன.
இன்று இறந்தால் காலச்சக்கரம் பின்னோக்கி சுழன்று நான் அந்த காலத்திற்கு செல்ல முடியும் என்றால் நான் அதற்கு முழு மனதாக தயாராக இருக்கிறேன் !!!

No comments: