Wednesday, June 3, 2015

ஜெய காந்தன்

ஜெய காந்தன் அல்ல ஜெய காந்தம் அவர், படிப்போரை அவர் பக்கம் இழுப்பதால்...

அவர் எனக்கு அறிமுகமாகியது 2002 - 2003 இலயோலா தமிழ் துறையில்.
அங்கு தான் முதன் முதலாக பார்த்தேன் இல்லை படித்தேன்.

கணிப்பொறி முதுகலையில் படித்த பொழுது நான்கு புத்தகங்கள் நூலகத்தில் எடுக்கலாம் என்ற நிலையில் நான்காவதாக அறிமுகமாகி , பிறகு நான்காகவும் ஆக மாட்டாரா என்ற ஆவலை தூண்டியவர்.

ஜெய காந்தன் சிறு கதைகள் ...ஒவ்வொன்றும் சிந்தனையை விதைக்கும் விதைகள்.
அடுத்து என்ன எழுதுவார், எப்படி முடிப்பார் என்கின்ற ஆர்வத்தை விருட்சமாக்கும் விதைகள்.

நான் கிறுக்கிய சில கதைகளில் அவரின் தாக்கம் இருக்கிறது என்றான் நண்பன்.
அவருக்கு முன்னால் அவைகள் எல்லாம் ஒரு ஆக்கமா என்றிருக்க, எப்படி தாக்கம் இருக்கும் என்று நினைத்தேன் இருந்தும் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அன்று புத்தகமாக அறிமுகமானவர் இன்று என் அலைபேசியில் App-ஆக தொடர்கிறார்.

81 வயதில் இறப்பு இயற்கை தான், ஆனால் அவரின் இடத்தை வேறொருவரால் நிரப்புவது இயற்கையில் சாத்தியமல்ல என்பதால் இன்னமும் வாழ்கிறார்.

No comments: