Monday, March 8, 2010

நாம் இந்துக்களா?

இந்திய பழங்குடி வம்சா வழியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களான நாகர்களுக்கு,திராவிடர்களுக்கு,தமிழர்களுக்கு கற்பனைக் கடவுளர்களோ,அதன் மூலம் எழுந்த மதங்களோ,அதன் மூலம் பிரிந்த சாதிகளோ கிடையாது.தமக்கு உணவளித்த சூரியனையும்,மழையையும் வணங்கினார்கள்(மரியாதை நிமித்தமாக...)தமிழர் பண்டிகையான பொங்கலும் அதை பறை சாற்றுவதை காணாலாம்.முன்னோர்களை வணங்கினார்கள்,அந்த வழிப்பாட்டின் வெளிப்பாடு தான் அய்யனார் வழிபாடும்,காளி,அம்மன் மற்றும் முனீஸ்வர வழிபாடும்.இதுவே சிறு தெய்வ வழிபாடென பிற்காலத்தில் அறியப்பட்டது.

அதன் பிறகு கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள்,தாங்கள் இந்த சமுதாயத்தில் உயர்ந்த மற்றும் மேம்பட்ட நிலையில் நிலை நிறுத்திக் கொள்ள அவர்கள் கையிலெடுத்த ஆயுதமே கற்பனைக் கடவுளர்களும்,சாதியும்.அவர்களின் சிவந்த நிறமும் நம் மன்னர்களின் மத்தியில் உயர் நிலையை அடைவதற்கு உறுதுணையாக இருந்தது.முதலில் பெண்களை மன்னர்களுக்கு கூட்டிக் கொடுக்கும்(பார்ப்பு என்பது பெண்களை கூட்டிக் கொடுத்தல் என்பதாகும்,அதுவே பிற்காலத்தில் பார்ப்பனர்கள் என்று ஆயிற்று) வேலையை செய்த அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மன்னர்களின் நம்பிக்கைக்குரியவராகி அவர்களுக்கு நிரந்தர ஆலோசகராகவும் ஆயினர்,மன்னர்கள் மூலமாக நிலம் மற்றும் இதர வசதிகளையும் பெற்றனர்.குளிர் பிரதேசத்தில் நெருப்பை அவர்கள் தங்களின் உடம்பை சூடேற்றுவதற்கு பயன்படுத்தியமையால் அந்த நெருப்பின் பயன்பாடு அவ்ர்களின் சராசரி வாழ்க்கையிலும் தொடர்ந்து வருகிறது அதற்கான சிறந்த உதாரணம் அவர்களின் திருமண முறையில் அக்னி வளர்ப்பது.திராவிடர்கள் போலவே அவர்களுக்கும் ஆரம்பத்தில் கற்பனைக் கடவுளர்களோ,மதமோ கிடையாது.ஆனால் கடவுளர்களையும்,சாதியையும் உருவாக்கினர் நான் ஏற்கனவே கூறியது போல் அவர்கள் இந்த சமுதாயத்தில் தங்களை மேம்பட்ட,உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொள்வதற்காக...

அவர்கள் பயன்பாட்டில் இருந்த நெருப்பை அக்னி பகவான் என்றனர், திராவிடர்கள் வணங்கிய சூரியன் சூரிய பகவான் ஆனது, நீர் வருண பகவான் ஆனது அதற்கு பல கதைகளும் உருவாக்கப்பட்டது,கடவுளர்கள் உருவாயினர்.4 ரிக்,யஜுர்,சாம,அதர்வண) வேதங்கள்,6 வேதாந்தங்கள் மற்றும் 108 உப நிடதங்கள் உருவாயின.4 வேதஙகள் மூலம் 6(சிஷ்யை,கல்பகம்,வியாகரனம், நிருத்தம்,சந்தஸ்,ஜோதிடம்) உப நிடதங்கள் உருவாயின.இராமயண,மகாபாரத புராண இதிகாசங்கள் எழுதப்பட்டது இதற்கெல்லாம் அடி நாதமாக முதலில் எழுந்த நூல் ஆரிய மன்னன் மனு எழுதிய மனுதர்மம்.படைக்கும் கடவுள்,காக்கும் கடவுள்,அழிக்கும் கடவுள் பற்றிய விளக்கங்கள் முக்கியமாக வருணாசிரம அடிப்படையில் எழுதப்பட்ட சாதிப்பிரிவுகளும் இதில் அடக்கம்.
அவர்களின் கதை நாயகர்களான சிவன்,பிரம்மா மற்றும் விஷ்ணு அதன் மூலம் வந்த வினாயகர்,அய்யப்பன் (ஏன் இங்கு முருகன் வரவில்லை!? அதற்கான விளக்கத்தை பிறகு தருகிறேன்)இவர்களை வழிபடும் முறையெல்லாம் பிற்காலத்தில் பெரு தெய்வ வழிபாட்டு முறையென அறியப்பட்டது.ஆரியர்கள் தேவர்கள் ஆயினர் அவர்களின் தலைவன் இந்திரன் உருவாக்கப்பட்டார்,திராவிடர்கள் அசுரர்கள்,அரக்கர்கள் ஆயினர் அவர்களின் தலைவனாக இராவணன் உருவாக்கப்பட்டார்.அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைப்பது மற்றும் சாமி வந்து ஆடுதல் அனைத்துமே சிறு தெய்வ வழிபாட்டின் வழிபடும் முறையாக பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டதே...
சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிவ லிங்கங்களும்,கூத்தாடும் சிவன் வடிவமும்,ஓக நிலையிலுள்ள சிவன் வடிவமும் சான்றாகின்றன,தாய் தெய்வ வழிபாடும்,முருக வழிபாடும் இந்தியா முழுவதும்,சிந்து வெளியிலும் நிலவியுள்ளன.முருகன்,கண்ணன்,வேந்தன்,வருணன்,கொற்றவை எனும் சிறு தெய்வங்கள் ஐந்திணைக்குரிய வழிபடு தெய்வங்களாக தமிழிலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன,ஒவ்வையின் புறனானூற்றுப் பாடலும் இதை மெய்ப்பிப்பதை காணலாம்...அதாவது இந்து என்ற சொல்லாடல் வருவதற்கு முன்பு,பல்வேறு படையெடுப்புகள் இங்கு புகுவதற்கு முன்பு இருந்த மதம்...மதம் என்பதை விட வழிபடு முறை என்று சொல்லலாம்....ஏனென்றால் பழந்தமிழர் அந்த தெய்வங்களை எல்லாம் வானத்தில் மேலுலகத்தில் வாழும் தெய்வங்கள் என்று நினைக்கவில்லை.....இயற்கை,முன்னோர்,சக்தி,சிவ,சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லலாம்.
தமிழும்,ஆத்திரேலிய பழங்குடி மொழிகளும் நெருங்கிய தொடர்புடையன,ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் திருனீறு அணியும் பழக்கமுடையவர்கள்.இவர்கள் ஆத்திரேலியாவில் குடியேறிய காலம் கி.மு 40,000 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது,சிவ வழிபாட்டின் தொன்மையை இதன் மூலமாகவும் உணரலாம்...மெக்ஸிகோவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய செவ்விந்தியர்களும் சிவ வழிபாட்டினர்,இந்தியாவில் சிவன் கோயில்களே மிகுதி...பிற்காலத்தில் வந்ததே திருமால் கோயில்கள்,சிற்றூர்களில் திருமால் கோயில் காண்பது மிகவும் அரிது...சிவன் கோயிலில் திருமாலுக்கு சிலை இருக்கும்...திருமால் கோயில்களில் சிவனுக்கு இடம் கிடைப்பதும் அரிது!?

எது எப்படியோ, பெரு தெய்வ வழி பாட்டிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதும் சிறு தெய்வ வழிபாட்டின் இது போன்ற மூட நம்பிக்கையிலிருந்து வெளியே வருவதும் பகுத்தறிவுள்ள நம்மைப் போன்ற சுயமரியாதைக்கரர்களின் கடமை.

சிந்து- சிந்தி- சிந்தியா அதாவது சிந்து சமவெளி நாகரீகம்,சிந்தி இன மக்கள் இதன் வழி சிந்தியா பிற்காலத்தில் இதுவே இந்து- இந்தி- இந்தியா என்று திரிந்தது...இந்து என்ற சொற்றொடரே பிற்காலத்தில் வந்தது தான்,கிறிஸ்துவர்,முஸ்லீம் மற்றும் வேறு இன மக்களை தவிர்த்த ஏனையர் இந்து என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டது(இதில் ஆரியரும் அடக்கம்,திராவிடரும் அடக்கம்).முதலில் இந்த நாம் யார் என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்...ஆரியரா? திராவிடரா? அவர்களின் கலப்பா....(சிவப்பு நிறத்தவர் பிராமணர் அல்லாத வகுப்பிலும் இன்று உள்ளனர்,கறுப்பு பிராமணரும் உள்ளனர்)..இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் ஆரியர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர்,திராவிடர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர்.

ஆரியர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர் சிறு தெய்வ வழிபாட்டை கடைபிடித்தது கிடையாது,ஆரியர் அல்லாதோர் இரண்டையும் கடைபிடிப்பவர் ஆனால் ஒருகாலத்தில் இருந்த ஆரியர்களின் ஆதிக்கத்தால் நாளடைவில் பெரு தெய்வ வழிபாடே நம் வழிபாடு என்றும் நம்பியும் விட்டனர்.தம்மை மதிக்காத இடத்தில்,ஏற்றத்தாழ்வு,தீண்டாமை நிலவும் இடத்தில் இருப்பது சுயமரியாதை இல்லை,பகுத்தறிந்து சிந்தியுங்கள் என்று அவர்களுக்கு சில பகுத்திறிவு வாதிகளால் அறிவுறுத்தப்பட்டது,படுகிறது...

அந்த பெரு தெய்வ வழிபாடு நமக்கு சொந்தமானதல்ல,அதனால் ஏற்றத்தாழ்வு மிகுந்த,சாதி அமைப்பை ஏற்படுத்திய அந்த வழிபாட்டை விட்டொழியுங்கள்...இந்து என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வாருங்கள் என்று பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்றவர்களால் அறிவுறுத்தப்பட்டது... நான் வெளியே வந்து விட்டேன்,சிறு தெய்வ வழிபாடே என் வழிபாடு.பகுத்தறிந்து சிந்திக்கும் சுயமரியாதைக்காரன்,தமிழன்,திராவிடன், நாகன்..... நீங்கள்? சிந்தியுங்கள்.....

No comments: