Sunday, March 7, 2010

மரண தண்டனையை நீக்கவேண்டுமா?

இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் மரண தண்டனை இருக்கவே செய்கிறது,ஆனால் தண்டனைகள் குறையவில்லையே!!!கட்டுப்பாடுகள் மேலும் அதிகம் உள்ள பல நாடுகளிலும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஒவ்வொரு தவறுக்கும் ஆண்டுகள் அடிப்படையில் தண்டனையை கொடுத்து கொலை செய்தால் அவனை கொலை செய்வது என்பது,கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் பழி வாங்கும் போக்கு மாறியே அமையும்,தண்டனை அவன் திருந்துவதற்கு தரும் சந்தர்ப்பமே தவிர அவன் உயிரை எடுப்பதற்காக அல்ல.
கொலை செய்பவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.ஒன்று எப்படியும் தப்பித்து விடலாம் என்று நன்கு யோசனை செய்து செய்பவர்கள்,இரண்டாவது நாம் பிடிபட்டால் தண்டனை பெறுவோம் ஆனால் அதைப் பற்றி கவலை படாமல் செய்பவர்கள்.மூன்றாவது உணர்ச்சி வயப்பட்டு செய்பவர்கள்,இந்த 3 வகையினரையும் மரண தண்டனை தடுத்து விடாது,மரண தண்டனை மூலம் தப்பை குறைக்கலம் என்று நினைப்பது திரைப்படத்திற்கு தான் பொருந்தும்.வாழ்வியல் நெறி மற்றும் வாழ்க்கை முறைகளில் தான் மாற்ற்ம் கொண்டு வர வேண்டும்.சிறையிலும் திருந்துவதற்கான சீர்திருத்த நடவடைக்கைகள் மேலும் செயல் படுத்த வேண்டும்.

No comments: