Friday, March 5, 2010

இராமர்..இராமர் பாலம்..இராமாயணம்

வால்மீகி இராமாயணம்(ஆயிரத்தெட்டு இராமாயணங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஆதி மூலமாக சொல்லப்படுகிற வால்மீகி இராமாயணத்தை நாம் எடுத்துக் கொள்வோம்.) சுமார் 27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு திரேதாயுத காலத்தில் எழுதப்பட்டதாக,இராமாயணம் அந்த காலத்தில் நிகழ்ந்ததாக வால்மீகி இராமயணத்தில் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த உலகத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்ததாக அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிந்து போனதும் இந்த 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான்.

இதன் மூலம் நமக்கு எழும் இரண்டு கேள்விகள்...
1.கிட்டத்தட்ட உயிர்கள் தோன்றியே 50,000 ஆண்டுகள் தான் இருக்கும் பட்சத்தில்,27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் இருந்ததாகவும்,இராமாயணம் நிகழ்ந்ததாகவும் கூறுவதை எப்படி நம்புவது?சரி இராமர் கடவுளின் அவதாரம் அவர் இருந்து விட்டு போகட்டும்,அவரிடம் கூட இருந்த அவர் குடும்பத்தினர் அனைவரும்,வானர சேனைகளும் மேலும் அசுரர்கள் உட்பட கடவுளின் அவதாரங்களா?
2.இந்தியாவும்,இலங்கையும் பிரிந்த நிகழ்வே இந்த 50,000 ஆண்டுகளுக்குள் தான் என்று இருக்கும் பட்சத்தில் இராமரும்,வானர சேனைகளும் எதன் மீது பாலம் கட்டினார்கள்? நிலத்தின் மீதா?(யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தினார்!!!)

மேலும் 27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் இராமாயணத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புத்தரைப் பற்றிய குறிப்புகள் சில இடங்களில் வருவது எப்படி?இதிலிருந்து இராமாயணம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான போரின் கற்பனை கதையே! ஆபாசங்களும்,புரட்டுகளும் நிறைந்த வால்மீகி போதையில் உளறிய பேத்தலே இராமாயணம்.உலக சரித்திரத்தை எழுதிய பண்டிதர் நேருவும் இதையே வலியுறுத்தியதை இங்கே குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

இந்திய தொல்பொருள் ஆய்வின்(Archeological Survey of India-ASI) படி,இராமாயணத்தில் வரும் இடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறதே அன்றி இராமாயணம் நடந்ததற்கான ஆதாரமோ,இராமர் இருந்ததற்கான ஆதாரமோ இல்லை என்று கூறுவதன் மூலம் இதை மெய்ப்பிப்பதை காண்லாம்.மொத்தத்தில் இராமர் பாலம் மட்டுமின்றி இராமரோ,இராமாயணமோ கற்பனையே,கற்பனைக்கு கூட எட்டாத ஆபாசமும்,புரட்டும் நிறைந்த குப்பையே!

No comments: