Friday, March 5, 2010

சாதி ஒழிய என்ன வழி?

கலப்புத் திருமணம்???
பெரியார் கூற்றுப் படி கலப்புத் திருமணம் என்ற சொல்லாடலே தவறு,மனிதனுக்கும்,விலங்குக்கும் நடந்தால் தான் அது கலப்புத் திருமணம்,இது சாதி மறுப்புத் திருமணம் என்பார்.அந்த சாதி மறுப்புத் திருமணத்தால் சாதி ஒழியக் கூடும் ஆனால் இந்த ஆணாதிக்க சமுதாயம் திருமணத்திற்கு பின் ஆணின் சாதி அடையாளத்தையே முன் நிறுத்தும்.ஆனால் பெருகி வரும் சாதி மறுப்புத் திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பங்களின் சாதி மத அடையாளங்களை அழிக்க உதவும் என்பது நிதர்சனமான உண்மை......

இட ஒதுக்கீடு நீக்கல் சாதியை அழிக்க உதவும் என்பது நிச்சயமாக அறியாமையே,சில படங்கள் வெற்றி பெறுவதற்கு வேண்டுமானால் இந்த கருத்து உதவியாக இருக்கும்!!!3000 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஒரு இனம்,150 ஆண்டுகளுக்கு தங்கள் உரிமையை பெற்று தன்னிறைவை அடைந்து விடும் என்பது நம்பத்தகுந்தது அல்ல,அடிமைப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம் சமுதாயத்தின் மேல் நிலையை அடைவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இட ஒதுக்கீடு என்பது.இட ஒதுக்கீடு நீக்கலை ஆதரிப்பவர்களுக்கு என் இரண்டு கேள்வி....

உதாரணத்திற்கு 5 தலைமுறையாக சரியாக உணவு ஊட்டம் கொடுக்காமல் ஒரு சந்ததியையும்,5 தலைமுறையாக நன்றாக உணவு ஊட்டம் கொடுத்து ஒரு சந்ததியையும் வளர்த்து எடுத்து,6-வது தலைமுறையில் பிறக்கும் அந்த 2 குழந்தைகளையும் மோத விடுவது என்பது எப்படி நியாயமாகும்?அறிவியல் ஆதாரப்படி நோஞ்சானாக இருக்கும் முதலாம் குழந்தைக்கு இரண்டாம் குழந்தையை விட அடுத்த 5 தலைமுறைக்கு தொடர்ச்சியாக ஊட்டம் அதிகமாக கொடுத்து வளர்ப்பதே நியாயமாகும்,அதுவே இட ஒதுக்கீடு என்பது....

இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழிக்கப்படும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி...உங்களுக்கு பிறக்கும் போது சாதி வேண்டும்,திருமணத்தில் சாதி வேண்டும்,இறக்கும் போதும் சாதி முறைப்படி செயல்கள் செய்ய வேண்டும் ஆனால் கல்வி,வேலை வாய்ப்பில் மட்டும் இருக்கக் கூடாது ஏனென்றால் கீழெ உள்ளவன் உங்களுக்கு சமமாக வந்து விடுவானே என்ற பயம்,முதலில் நம் குழந்தைகளின் சாதி மறுப்பு காதல் திருமணத்தை ஆதரிப்போம்,உடலில்,இரத்ததில், நடைமுறையில் நாம் செயல் படுத்தும் சாதி அடியாளங்களை அகற்றுவோம் அதற்குப் பிறகு அனைவரும் சமதர்ம நிலையை அடிந்த பிறகு பெரியார்,அம்பேத்கார் பின்வருமாறு உரைத்தது போல் இட ஒதுக்கீட்டை நீக்குவதைப் பற்றி முடிவு செய்யலாம்...

அம்பேத்கார் கூற்று :- இட ஒடுக்கீடு என்பது எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்க முடியாது,சாதி அடியாளங்கள் அகற்றப்பட்டு,சமதர்ம நிலையை அடிந்த பிறகு,இட ஒதுக்கீட்டை பரிசீலனை செய்யலாம்.பெரியார் கூற்று :- ஒருகாலத்தில் நாம் கையேந்திய நிலையில் இருந்தோம் என்பதற்காக,இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் கையேந்தும் நிலைக்கு இட ஒதுக்கீடு தள்ளி விடக் கூடாது.ஆனால் இட ஒதுக்கீட்டை பரிசீலனை செய்யும் நிலை இன்று வந்து விடவில்லை,அதற்கு இன்னும் வெகு காலம் உள்ளது.

No comments: