Tuesday, August 20, 2013

Independence Day!!!

Independence Day-வை உங்கள் நாட்டில்... எப்படி அழைப்பார்கள் என்று ஒரு அமெரிக்கன் கேட்க... அதற்கு சுற்றியிருந்த ஹிந்தி(ய) கூட்டம் சுவதந்திரா என்று அழைப்போம் என்றது.(அப்படியென்றால் வேறெந்த மொழியிலும் சுதந்திரத்தை அழைக்கக் கூடாதா!?)

இங்கு அமெரிக்காவில் நடைபெறும் ஹிந்திய சுதந்திர தின விழாவில் ஹிந்திப் பாட்டும் கும்மாளமும் தான்.

# யார் யாரை புறக்கணிக்கிறார்கள்??? நீங்கள் புறக்கணிப்பதால் நாங்கள் உங்களை புறந்தள்ளிவிடுகிறோம், எங்களுக்கான எல்லையை வரையறுக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்...
கடந்த இரு முறையை விட இம்முறை பொங்கல் திருவிழாவை இங்கு அலுவலகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி நாம் யார் என்பதை எடுத்துக் காட்டிட வேண்டும்/ தனித்துக் காட்டிட வேண்டும் என்பதிலே தான் நாட்டம் அதிகரிக்கிறது.
------
சனாதன தர்மம் கெடுகிறது அதனால் வெள்ளையன் வெளியேற வேண்டும் , சுதந்திரம் வேண்டும் என்று நேரடியாகப் பேசிய திலகர் & கோ சுதந்திரம் கேட்க அருகதையற்றவர்கள் என்றால்,

வர்ணாசிரமத்தை வைத்துக் கொண்டே தீண்டாமையை எதிர்க்க வேண்டும் என்கின்ற நிலையில் இருந்த காந்தி & கோ அதற்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்.

பகத் சிங் மற்றும் நேதாஜி சற்றே வித்தியாசமானவர்கள் ஆனால் முழுமையாக அல்ல...அவர்களும் சமூக விடுதலையை தொட்டதாக தெரியவில்லை ஆனால் திலகர் போன்று அதற்கு எதிராகவும் இல்லை.

அண்ணல் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையும் வேண்டுமென்று வலியுறுத்தினார், வடக்கே ஜோதிபா பூலே, கேரளத்தின் நாராயண குருவும் இதையே வலியுறுத்தினார்கள்.

#இப்பொழுது புரிகிறதா ஏன் நம் முப்பாட்டன் பெரியார் ஆகஸ்ட் 15 ஐ கறுப்பு தினம் - துக்க நாள் என்றார் என்று!!!

-----

பால்ய விவாகத்தை ஆதரித்த
வினாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா என்று கலவரம் ஏற்படுத்திய
சூத்திரர்களும் பஞ்சமர்களும் கல்வியே கற்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசிய
கலப்பு மணச் சட்டத்தை எதிர்த்த
சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல என்று திமிராகப் பேசிய

திலகர் உயர்ந்தவரா இல்லை மேற்கூறிய விடயத்திற்கெல்லாம் ஆதரவாக செயல்பட்டவர்கள் உயர்ந்தவர்களா???

# இந்தத் திலகரும் அவர் கோஷ்டிகளும் வேண்டிய சுதந்திரம் யாருக்காக, எதற்காக???

-----

அவன் பல்கலைக் கழகங்கள் நிறுவி அனைவருக்கும் கல்வி கொடுப்பான், தபால் துறை, நீதித் துறை, சாலைப் போக்குவரத்து கொண்டு வருவான், அணை கட்டுவான், கட்டுமானத்தில், தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவான், இரயில் போக்குவரத்து அமைப்பான்.

இவனோ...அய்யோ அனைவருக்கும் கல்வியா அது தவறானதே... இரயில் போக்குவரத்தா... இதனால் பேருந்தில் ஒரு சாதி ஒரு பக்கம் பிற சாதிகள் இன்னொரு பக்கம் உட்காரும் நிலைமை மாறுமே... சனாதன தர்மம் சிதையுமே என்று அவனை எதிர்ப்பான்.

இவன் சுதந்திரப் போராட்ட வீரனாம்...இது சுதந்திரமாம்.....

# இது நமக்கான சுதந்திரமா இல்லை இவனுக்கான தந்திரமா???

-----

திலகரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்...திலகரும் அவர் வழி வந்தவர்களும் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள் என்று!

சனாதன தர்மம் ஆங்கிலேயனால் கெடுகிறது அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்பதே அவர்களின் பார்வையில் பிறப்புரிமை!!!

அந்த சனாதன தர்மத்தை உடைத்து சமூக விடுதலை பெறுவதற்காகவாவது நாம் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறிது காலத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

-----

ஹிந்தியாவை இன்னமும் குறைந்தது 50 வருடம் ஆங்கிலேயன் ஆண்டிருக்கக் கூடாதா என்கின்ற ஏக்கம் மட்டுமே ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் எஞ்சி நிற்கிறது!!!

காங்கிரசால் 
நாடு பிடிக்க 
செய்யப்பட்ட 
தந்திரம்,

காந்தியால் 
வாங்கியதாக 
சொல்லப்படும்
சுதந்திரம்!

அரசியலோடு
சமூக விடுதலையும்
வேண்டுமென்றார்
அண்ணல்,

அது கிடைக்காமல் தான்
இன்று வரை
தொடர்கிறது
இன்னல்!!!

No comments: