Tuesday, August 13, 2013

கிறித்துவ நண்பர்களுக்கு...

1.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.
நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும், நடக்காவிட்டால் ஆண்டவனின் திட்டம் வேறு மாதிரி இருக்கிறது என்று அர்த்தம்!

2.நாம் பிரார்த்திக்காவிட்டாலும் நம் நண்பர்கள், உறவினர்கள், வேறு யாராகினும் பிரார்த்தித்தாலும் நடக்கலாம், நடக்காவிட்டால் அதற்கும் ஒரு காரணம் நம்மிடம் இருக்கும்!

3.மாதந்தோறும் கடவுளுக்கென்று காணிக்கை வைத்து விட வேண்டும் இல்லையென்றால் வேறு வழியில் நமக்கு நட்டம் வரும்.

4.கடவுளை மறந்து விட்டால் அதை நமக்கு உணர்த்துவதற்காக நமக்கு ஒரு சின்ன இன்னல்/துக்கத்தை கடவுள் கொடுப்பார் அதற்கு பிறகாவது அவரை வணங்கி விட வேண்டும்.

# சத்தியமாக இதுவெல்லாம் என் போதனைகள் அல்ல... போதித்தவர்களிடமிருந்து கேட்டது. இதை படித்தாலே தெளிவாக விளங்கும் இவையெல்லாம் மனிதனால் பல்வேறு காலங்களில் சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்றவாறு புனையப்பட்டது மதத்தை நிலை நிறுத்துவதற்காக என்று. 

கடைசி இரண்டு வாக்கியங்கள்(3 & 4) மிகவும் முக்கியமானவை... அன்பே உருவான கடவுள் அப்படி சொல்லியிருக்க முடியுமா??? அவரை ஒரு சாதாரண கூலியாக, வில்லனாக ஆத்திகர்களே கேவலப்படுத்துகிறார்களே....



கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ரூ 2500-இலிருந்து தொடங்கி 4000 வரை சம்பள உயர்வு பெற்று அடுத்து தான் நல்ல வேலை கிடைத்தது.

பொருளாதார தேக்க நிலையில், திருமண நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதம் பாதி சம்பளம் பெற்று பிறகு புது வேலைப்பணி அதுவும் வெளி நாட்டில் கிடைத்தது.

புது வீடு வாங்கி கடனை அடைத்து முடிக்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதே இரண்டாவது வெளி நாட்டு வாய்ப்பு அமைந்தது.

அடுத்து...சமையலறை அடுக்கில் தலை இடித்து குணமானது, தற்காப்பு கலையில் நெஞ்செலும்பில் வலி ஏற்பட்டு குணமானது,கை பந்து விளையாட்டில் இடுப்பில் வலி ஏற்பட்டும் சரியானது  .....etc etc

இதற்கெல்லாம் நான் சாட்சிகளாக இருந்திருக்கக் கூடும்..... பெரியார் என்ற கிழவனை என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால்...

# உன் நம்பிக்கை உன் கடவுளை வாழ வைக்கிறது, என் நம்பிக்கை என்னை வாழ வைக்கிறது!!!


---

என்னால் பேருந்தில் செல்ல முடியவில்லை, அதனால் கார் வேண்டுமென்று கடவுளிடம் பிராத்தித்தேன். ஒரு பெரும் பணக்காரர் மூலமாக எனக்கும் , இந்த பிராத்தனை அமைப்புக்குமாக ஒரு கார் கிடைத்தது, என் தேவனுக்கு மகிமை... கோடானு கோடி நன்றிகள். - ஒரு பிராத்தனை அமைப்பின் சகோதரி.
(அவர் கொடுத்தது இயற்கையாக அமைந்ததா... இவர்கள் கோரிக்கை பல பேருக்கும் வைத்தார்களா... என்றெல்லாம் ஆராய்ந்தால் நீங்களும் நானும் பகுத்தறிவாளர்களே!!!)

# நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு கடவுளிடம் பிராத்தித்து தீர்வு காணலாமே.. உதாரணத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சினை!!! கார் கொடுத்த கடவுள் இதையெல்லாம் சரி செய்ய மாட்டாரா???


---

அவனுக்கு சரியா பணத்தை செட்டில் செஞ்சா போதும் காரியத்த கணக்கா முடிச்சுடுவான்.

கடவுளுக்கு மாதந்தோறும் நம்மால் முடிந்த பங்கை ஒதுக்கி விட வேண்டும், நாம் நினைத்த காரியம் நிறைவேறிவிடும்.

# உங்க கடவுள உங்கள விட நாங்களாய்யா கேவலப்படுத்துறோம்??? இறைவா இவர்களின் பிழைகளை மன்னியும்!!!


---

என் அரிப்பை குணமாக்கினார், காய்ச்சலை குணப்படுத்தினார், தலைவலியை போக்கினார் என்று பல பேர் சாட்சி கூறினார்கள்...

காட்சிகள் முடிந்ததும்...என் அருகில் கால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நண்பரின் தலையில் கை வைத்தும் பாதிரியார் செபம் செய்தார்.

என் தோள் தாங்கி வெளியில் நடந்து வந்த நண்பரிடம் கேட்டேன்... உங்களுக்கு இன்னேரம் வலி குறைந்திருக்க வேண்டுமே என்று...

அவர் சிரித்தார்.

# நம்மை சமாதானம் செய்து கடவுளை பிழைக்க வைக்கும் சாட்சிகள்!!!


---

ஒளிக் கீற்றாகவும், வெளிச்ச திரளாகவும், பால் குடித்தும், இரத்தம் வடிந்தும் உனக்கு தெரியும் கடவுள் எனக்கு இதுவரை தெரிந்ததேயில்லை... உன்னிடம் இருட்டு நேரத்திலும்,ரகசியமாகவும் பேசும் கடவுள் என்னிடம் இதுவரை பேசியதேயில்லை......

ஒரு வேளை இதுவெல்லாம் எனக்கு நடந்தால்.....

# இதற்கான பதிலை என் முப்பாட்டன் ஈ.வே.ரா(பெரியார் என்று சொன்னாலே பல பேருக்கும் இன்றும் பேதி புடுங்குகிறதே...அவர்களின் நலன் கருதி!)முன்பே சொல்லிவிட்டான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்று!?


---

உன் நம்பிக்கை உன்னை முட்டாளாக்கினால் பரவாயில்லை, அது சூது வாதறியா, படிப்பறிவில்லா, பட்டறிவில்லா மக்களையும் சேர்த்து முட்டாளாக்கும் பொழுது தான்... அந்த நம்பிக்கையின் மீதான விமர்சனம் எழுவதும், விவாதிப்பதும் இன்றியமையாததாகிறது!!!

# கடவுள், மத நம்பிக்கைகள்!

No comments: