Friday, July 1, 2011

சத்திய சோதனை - 1 (காந்தியும்-அம்பேத்காரும்)

சத்திய சோதனை - 1

இது காந்தியின் சத்திய சோதனை அல்ல,காந்திக்கு ஏற்பட்ட சத்திய சோதனை. இந்த உலகில் எவரும்,எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல... நான் காந்தியை பற்றி விமர்சிக்கும் இந்த கட்டுரை உட்பட! விமர்சனம் என்றாலே தனிமனித தாக்குதல்கள் என்று பழக்கமாகிப் போய்விட்ட இந்த சமூகத்தில்,இந்த விமர்சனம் அந்த வரைமுறைக்கு உட்படாது,தனிமனித,தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காது,அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விமர்சனமாகவே அமையும்.ஒரு மேம்பட்ட, நாகரிக சமுதாயத்தில் விமர்சனம் என்று சொல்லப்படுவத்தும் மேற்கூறிய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தே அமைய வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமும் கூட! காந்தியை பற்றிய அவரின் பார்வையோ,வேறு சிலரின் பார்வையோ அவர் சரி என்று முடிவுக்கு வரலாம்,என் பார்வையில் அது தவறு என்ற முடிவுக்கு நான் வரலாம்.எது சரி,எது தவறு,எது நல்லது,எது கெட்டது என்பவைகளை எல்லாம் உங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

காந்தியும்-அம்பேத்காரும்

1931 ஆம் ஆண்டு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு சந்தித்த காந்தி மற்றும் அம்பேத்காரின் உரையாடல் பின்வருமாறு செல்கிறது.
அம்பேத்கார் - வணக்கம் காந்திஜி
காந்தி - வணக்கம் டாக்டர். தீண்டாமை பிரச்சினை குறித்து நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.அது ஒரு சமுதாய பிரச்சினை.அதை அரசியல் பிரச்சினையோடு முடிச்சு போட்டு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அம்பேத்கார் - அப்படியென்றால் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை பற்றிய அக்கறை எதுவும் உங்களுக்கும்,காங்கிரசுக்கும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.
காந்தி - அது இந்துக்களை பிளவுபடுத்தும் செயல்.அதற்கு நான் அனுமதிக்க முடியாது.
அம்பேத்கார் - உங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றி.

ஆகஸ்ட் 4,1932 ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றிய பிரிட்டிஷாரின் அறிக்கையில் அம்பேத்தார் வலியுறுத்திய தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
ஏர்வாடா சிறையில் இருந்த காந்தி இதை கேட்டு அதிர்ந்து இந்துக்கள் துண்டாடப்படுவதை காட்டிலும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதே மேல் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
விடயம் அறிந்து ஆத்திரம் அடைந்த அம்பேத்கார்,'காந்தி உயிருடன் இருக்க வேண்டியது அவசியம்.அதற்காக தாழ்த்தப் பட்டவர்கள் எல்லோரும் குழியில் புதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.எனக்கான மக்களின் நியாயமான உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க தயாரில்லை,இதற்காக தூக்கு மேடைக்கு செல்லவும் தயார்' என்று அறிவித்தார்.(அதற்கு பிறகு அந்த ஒப்பந்தம் செப்டம்பர் 24,1932 ஆம் ஆண்டு புனேவில் அம்பேத்காரின் அரை மனத்துடன்,காந்தியுடன் இணைந்து கையெழுத்தானது)

1935 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கான மாநாட்டில் அம்பேத்கார் பின்வருமாறு பேசினார்.'பொதுக்குளத்தில் நீர் எடுக்க முடியவில்லை.காலாராம் ஆலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை.அடிப்ப்டை உரிமைகள் அனைத்துமே தயவு தாட்சண்யமின்றி மறுக்கப்படுகின்றன.இந்து மதம் என்ற குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக, நாயை விடவும்,பூனையை விடவும் கேவலமாக நடத்தப்படுகிறோம்.இந்து மதத்தில் இருக்க வேண்டும் என்றால்,இத்தகைய அவமானங்களை கண்டிப்பாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றால் நம்மை சுய மரியாதையுடன் நடத்துகின்ற வேறு மதத்துக்கு போவதில் தவறில்லை'சற்று இடைவெளிவிட்டு பேசினார்...' நான் இந்துவாக பிறந்து விட்டேன்,ஆனால் நிச்சயமாக இந்துவாக சாகமாட்டேன்'.
இந்த பேச்சை கேட்டு 'அம்பேத்காரின் பேச்சு துரதிஷ்டவசமானது'என்று சீறினார் காந்தி.(இதனை தொடர்ந்து அக்டோபர் 4,1956 இல் நாக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் தன்னோடு சேர்த்து 2 இலட்சம் இந்துக்களை பவுத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்)

கடவுளின் குழந்தைகள்(ஹரிஜன்) என்று தாழ்த்தப்பட்ட மக்களை அழைக்கச் சொன்னால் மட்டும் விடயம் முடிந்ததா????? வேறு மதத்திற்கு மாறுவதை துரதிஷ்டம் என்று கூறிய காந்தி,தன் மதத்துக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்களை சுய மரியாதையுடன் நடத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள் மேற்கொண்டார்????? தீண்டாமை பற்றி அம்பேத்கார் பிறப்பதற்கு முன்பிருந்தே சிந்தித்து கொண்டிருந்தது மட்டும் தான் அவருடைய பணியாக இருந்ததா???வைக்கம் போராட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் கூட வேகம் காட்டிய போது காந்தி மட்டும் மென்மையான போக்கை கடைபிடித்தது ஏன்??? (இதை பற்றி காந்தியும்-பெரியாரும் தலைப்பில் விரிவாக காணலாம்)இவை போன்ற கேள்விகள் எல்லாம் தவிர்க்க முடியாததாகிறது...காந்தியின் தீண்டாமை பற்றிய அரசிய்ல்,சமூக பார்வையை பற்றி விமர்சனம் செய்கையில்!

2 comments:

Sundar said...

When reading this essay, it seems like, Gandhi wanted himself to be a HERO and to be spoken as MAHATHMA, but actually "HE WAS NOT".

This is my personal opinion. I hope, I own the right to speak up as a fellow citizen in my democratic mother India.

maathiyosi said...

Exactly.....Many times he has proved that he is just man...but we only made him as father of nation and mahathma :-) readd my 2nd article and comment da...